செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




திங்கள், 15 ஆகஸ்ட், 2011

பிராணயாமம்..








உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை பிராணயாமம் எனப்படும்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குத்
கூற்றை உதைக்குங் குரியது வாமே
-திருமூலர்

பொதுவாக யோகத்தில் மூன்று விதமான மூச்சுகள் கூறப்படுகின்றன.
1. தோள்பட்டை சுவாசம்
2. மார்பு சுவாசம்
3. அடிவயிற்று சுவாசம்

நம் பிராணன் என்னும் உயிர்நிலை சக்தியிøனை வசப்படுத்தச் செய்யும் கலை இது. பிராணயாமத்தின் மூலம் தச வாயுக்களும் சீரடையும்.
பிராணயாமத்தின் நான்கு படிகள்
பூரகம்-மூச்சை உள்ளிழுத்தல்
கும்பகம்-மூச்சை உள் நிறுத்துதல்
ரேசகம்-மூச்சை வெளிவிடுதல்
சூன்யம்-மூச்சை வெளிவிட்ட பின் கும்பகத்தில் உள்நிறுத்துதல்

பிராணயாமத்தின் பலன்கள்
மனஅழுத்தம் நீங்குகிறது. உடல் அசதி மற்றம் மன சோர்வு நீங்கி சுறுசுறுப்பு மேலோங்குகிறது. உளவியல்ரீதியான பாதிப்பின்றும் 75% விழுக்காட்டிற்கு மேலாக முன்னேற்றம் ஏற்படும். ரத்தஓட்டம் சீரடையும். நரம்பு மண்டலம் வலிமை பெறும். மூளையில் ரத்தஓட்டம் மிகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் நம் உடலைவிட்டு முழுவதும் நீங்கும். நம் உடலை, மனதை ஆரோக்கியமாகவும், முறையே வலிமையாகவும், வளமையாகவும் வைத்துக் கொள்ள உதவும். அளவுக்கதிகமான உடல் கொழுப்பைக் கரைத்து விடும். ஆயுள் அதிகரிக்கும். நினைவாற்றல் மிக மிக அதிகரிக்கும். நம் வயிறு, கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல் மற்றும் பெருங்குடல்களை வலிமையாக்கி சீரண மண்டலத்தைச் சீராக்கும். குரல் வளம் மிகும். ஆன்மிக பலம் அதிகரிக்கும். அலைபாயும் மனது ஒடுங்கி தன்னம்பிக்கை மிகும்.
உள்ளொளி பெருகும். (ஆன்மிக உணர்வு) மேலோங்கி மனஆற்றல் சிறக்கும்.

சுத்தமான, காற்றோட்டமுள்ள இடத்தில் பயிற்சி செய்ய வேண்டும். தனிமையில் அமைதியாக பயிற்சி செய்ய வேண்டும். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஓசோன் பரப்பினின்றும் (உயிர்க்காற்று) மிகுந்திருக்கும் வேளையில் செய்வது மிக நல்லது. வெறும் வயிற்றில் அல்லது அரை கப் சுத்தமான நீரை அருந்திப் பின் செய்ய வேண்டும். பத்மாசனம், சித்தாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற அமர்ந்த நிலை ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் யோகம், பிராணயாமம் செய்வதே நல்லது. இரவு விழித்திருந்தாலோ, களைப்பாக இருந்தாலோ பிராணயாமம் செய்யக்கூடாது. நம்முடைய ரத்த நாளங்கள் சுத்திகரிக்கப்பட்ட பின்பே பிராணயாமம் செய்ய வேண்டும். எனவே ஆசனம் செய்து ரத்த நாளங்களைச் சுத்திகரித்து விட்டுப் பின் பிராணயாமம் செய்வது நன்று.
(ஆசனத்திற்குப் பின் யோகம்)
காலை, மாலை குளித்த பின் செய்வது நல்லது. இல்லாவிடில் பிராணயாமம் செய்த பின் அரைமணி நேரம் கழித்தே குளிக்கவோ அல்லது சாப்பிடவோ வேண்டும்.ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது தலை, கழுத்து, முதுகு தண்டு ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். வாய், நாக்கு சுத்தமாக கழுவப்பட்டிருக்க வேண்டும். உடல் நலமற்ற நாட்கள் அல்லது தவிர்க்க முடியாத சூழல் காரணமின்றி இதர எல்லா நாட்களும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவால் மட்டுமே வெற்றி இலக்கினை அடைய முடியும்.
பிராணயாமத்தில் வகைகளில் சில
1. முக பஸ்த்திரிக வலிந்த உள் வெளிமூச்சு: கண்களை மூடிச் செய்ய வேண்டும். ஆசனத்தில் அமர்ந்து இருகைகளையும் மேலே தூக்கும் போது மூச்சை இழுத்து கீழிறக்கும் போது சத்தமாக வெளியிடவும். சிறிது சிறிதாக வேகமாக உள்மூச்சு, வெளிமூச்சு என்று ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 60 முறை செய்யலாம்.
பலன்கள் : நுரையீரலுக்கு அதிக பிராண வாயு செல்லும். மனஅழுத்தம் நீங்கும். கரியமில வாயு மற்றும் நச்சுப் பொருட்கள் பெருமளவு உடலை விட்டு நீங்கும். மூளையின் முன்புறத்தில் பெருமளவு இரத்தம் சென்று அப்பகுதியினை மிக மென்மையாக அதிர வைக்கும். மனநோய் நீங்கும். ஆண்மை பெருகும். நரம்பு மண்டலங்களும் நாளமில்லா சுரப்பிகளும் தூண்டப் பெறும். மற்றும் பல நன்மைகள் பெருகும்.
எச்சரிக்கை : உயர் இரத்த அழுத்தம் இருதய நோய், ஹிஸ்டீரியா உள்ளவர்கள் இந்தப் பயிற்சியினைச் செய்யக்கூடாது. முதன் முறையாகச் செய்பவர்கள் பயிற்சி ஆசிரியரின் உதவியுடன் செய்தல் மிக முக்கியம்.
2. கபாலபதி: கண்களை மூடி வலது கையினை நாசிக முத்திரையில் வைத்து செய்ய வேண்டும். பெருவிரலால் வலது நாசியினை அடைத்து இடது நாசி வழியாக மூச்சை வெளியிட்டு பிறகு வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியிட வேண்டும். 1 நிமிடத்திற்கு 10 முதல் 60 வரை செய்யலாம். பின்பு மோதிர விரலால் இடது நாசியினை அடைத்து வலது நாசி வழியாக அதே போல் செய்ய வேண்டும்.
பலன்கள் : முக பஸ்த்திரிகாவின் அனைத்து பலன்களும் கிடைக்கும்.
3. சுகப்பூர்வ பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக முத்திரையில் வைத்து ஒரே நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து வெளி விடுவது மூச்சை முதலில் வெளிவிட்டு பிறகு ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் உள்மூச்சு, வெளிமூச்சு 1:1 என இருக்கலாம். மெதுவாக 1:2 என்ற நிலைக்கு மாறி விட வேண்டும். முதலில் இடது நாசியில் (சந்திர நாடி) முறையும் பின் வலது நாசியில் (சூரிய நாடி) முறையும் செய்து மெதுவாக எண்ணிக்கையினை உயர்த்தலாம்.
பலன்கள் : இரத்த அழுத்தம் இதயநோய், மனஅழுத்தம், சர்க்கரை நோய், முதுகுவலி, மூட்டு வலி, தூக்கமின்மை, சோம்பல், ஞாபக மறதி போன்ற பல நோய்கள் குணமாகும்.
4. நாடி சுத்தி பிராணயாமம்: ஆசனத்தில் அமர்ந்து நாசிக முத்திரையில் மூச்சினை வெளியிட்டு ஆரம்பிக்க வேண்டும். வலது நாசியினை அடைத்துக் கொண்டு இடது நாசியில் மூச்சினை உள்ளிழுத்து (பூரகம்) பின் இருநாசிகளையும் அடைத்துக் கொண்டு (கும்பகம்) வலது நாசி வழியே மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும் (ரேசகம்).
பிறகு அதே போல வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி இடது வழியாக வெளியிட வேண்டும்.

கால அளவு : ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தால் 1:1:1 என்று செய்து சில நாட்களில் 1:2:1 என்று நீட்டி பிறகு 1:4:2 என்ற அளவில் செய்யலாம்.
பலன்கள்: 72,000 நாடிகளும் (ட்யூபுலர் சேனல்ஸ்) சுத்தப்படுத்தப்படுகின்றன. நுரையீரலின் கொள்ளளவு மிகும். ஆஸ்துமா, ஈஸ்னோ பிலியாசைனஸ் மற்றும் பல நோய்களை வேரோடு அழிக்கலாம். நினைவாற்றல் பல மடங்கு பெருகும். அலைபாயும் மனது ஒடுங்கும். உடல் புத்துணர்ச்சி பெரும். உளவியல் ரீதியான பிரச்சனைகள், மனோ பயம் நீங்கும்.
எச்சரிக்கை : பயிற்சியாளரின் உதவியின்றி எந்த பிராணயாமப் பயிற்சிகளும் செய்யக்கூடாது. இதய நோயாளிகள் கும்பக நிலையில் மூச்சை உள்நிறுத்துதல் மிக குறைந்த அளவே இருக்க வேண்டும். அல்லது நோயின் தன்மைக்கேற்ப கும்பகம் செய்யாமல் இருப்பது நல்லது. அதே போல ரேசகம் குறைந்த மாத்திரையில் செய்ய வேண்டும்.

கோபத்தை இறைவன் ஏன் படைத்தான்?

வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்து போகட்டும் என்ற பொருளில், அவ்வை ஆறுவது சினம் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும் என்கிறது. மற்றொரு சூக்தம், எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும். அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும், என கோபத்தைப் துதிக்கிறது. கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே! அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தத்துவம் உதிர்க்கிறார் வியாசர்....







எப்போது ஒருவன் தனது மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தையும் தூக்கி எறிகிறானோ, அப்போது தான் ஞானம் உடையவனாகிறான்.

ஞானி என்பவன் தான் காணும் காட்சி அனைத்தையும் தெய்வகாட்சியாகவே காண்பான். நல்லது, கெட்டது, உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடுகள் அவனுக்கு இருப்பதில்லை.

எண்ணங்கள் ஆக்கவும், அழிக்கவும் வல்லவை. நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனை அடியோடு அழித்து விடுகின்றன.

சுக்கான் இல்லாத படகு இலக்கை அடைவதில்லை. அதுபோல, திசையில்லாத மனம் கடவுளை அறிந்து கொள்வதில்லை.

புலன்களின் ஆதிக்கத்தில் வாழும் வாழ்க்கை இவ்வுலகத்திற்கு சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதே ஆன்மிக வாழ்க்கை.

கடவுளுக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பக்கட்டம். ஞானம் முதிரும்போது பயம் அன்பாக மாறிவிடும். பூரண அன்பு என்பது பயத்தை முழுமையாக புறக்கணித்துவிடும்.

கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் ஒருவனின் மனம் தூய்மை அடைகிறது.

ஆணவமும், மோகமும் இல்லாதவர்கள், இன்பம், துன்பம் என்னும் இருநிலைகளைக் கடந்தவர்கள், ஆசைகளை அறவே ஒழித்தவர்கள், மெய்ஞானம் அடைந்தவர்கள் அழிவில்லாத ஆனந்தமாகிய கடவுளை அடைகிறார்கள்.

பணக்காரனுக்கும் ஏழை எளியவரைப் போலவே வாழ்வில் துன்பங்கள் உண்டாகின்றன. ஏழை பணத்திற்காக அலைகிறான். பணக்காரன் நிம்மதி தேடி அலைகிறான்.

மகிழ்ச்சியில் தொடங்கி, மகிழ்ச்சியில் வசித்து, மகிழ்ச்சியில் அடங்கிப்போவதே உயர்ந்த வாழ்வாகும்.

ஒருவனுடைய மனதில் இருக்கும் விருப்பும், வெறுப்பு எண்ணங்களே சுகதுக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன.

உலகில் அனைத்து விஷயங்களும் தெரியும், தெரியாது என்ற இருவகைக்குள் அடங்கி விடும்.

செல்வத்தால் இன்பம் பெறுவதைக் காட்டிலும், துன்பத்தையே அதிகமாக்கிக் கொள்கிறோம். சிரிப்பவனை பணம் அழ வைத்துவிடும், அழுபவனை சிரிக்க வைத்து விடும்.

மனிதன் எதைக் கண்டாலும் உடனே அதை அடையத் துடிக்கிறான். அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் உண்டாகிறது. அந்த ஆசையே பாதி அவதிக்கு காரணமாகும்.

உலகில் மனிதன் ஒரு பங்கு இன்பத்தைப் பெறுவதற்காக ஒன்பது பங்கு துன்பத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறான்.

வெறும் மன உணர்ச்சிகளுக்கு ஆளாகி வாழும் மனிதன் மிருகங்களுக்குச் சமமானவன்.

உணர்ச்சிவயப்பட்டு கொந்தளிக்கும் குணம் கொண்டவர்களைத் துன்பம் நிழல் போலப் பற்றிக் கொள்ளும்.

வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்தின் மூலமும் மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி...







கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ""ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா,'' என்று உத்தரவிட்டார்.""சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது?'' என்றாள் அவள்.
""நீ யமுனையின் அருகில் போய், "நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு'< என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும்,'' என்று பதிலளித்தார் கண்ணன்.
"என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்?' அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.
யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,""யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது,'' என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா
!

போதும் என்ற திருப்தி கிடைப்பது எப்போது? - விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்..





எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம்.


 பகவானும் கீதையில், ""எவன் தனக்காக மட்டும் 


ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ, 


அவனுடைய பாவத்தையும் முழுக்க அவனே தான் 


அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் 


பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள்,'' என்கிறார். 


அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், 


இதிலே தான் ஒருத்தரைப் பூரணமாகத் 


திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், 


நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு 


கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்கு 


மேல் தந்தாலும் போதும் என்று சொல்ல மாட்டான். 




அன்னம் போடுகிற போது தான், ஒருத்தன் என்ன 


தான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஓர் அளவுக்கு 


மேல் சாப்பிட முடியாது. 

நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து 


ரட்சிப்பதும் அன்னம் தான். அதனால் தான், "உண்டி 


கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்வர். 


மணிமேகலை என்னும் காப்பியம் இப்படி 


அன்னதான விசேஷத்தைச் சொல்லியிருக்கிறது. 


மணிமேகலைக்கு காஞ்சியில் அட்சயபாத்திரம் 


கிடைத்து, அவள் அதை வைத்துக் கொண்டு சகல 


ஜனங்களின் பசிப்பிணியைப் போக்கினாள். 




இதற்கு அநேக யுகங்கள் முந்தியே சாக்ஷõத் 


அம்பாளும் இதே அன்னதானத்தை இங்கு 


பண்ணியிருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, "இரு நாழி 


நெல் கொண்டு எண்நான்கு அறம் இயற்றினாள்' 


என்று சொல்லியிருக்கிறது. இங்கே அன்னபூரணிக்கு 


சந்நிதி இருக்கிறது. 

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

திருநீறு அணிவது ஏன்?





நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் 
உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. 
அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.




      விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்


1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.


2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.


3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி (அநாகதம்) தெய்வீக அன்பைப் பெறலாம்.

மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சூட்சுமம் அங்கு உள்ளது.
















செவ்வாய், 5 ஜூலை, 2011

எளிய ஆகம பூஜா முறை..



  • விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக் கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்.)
  • பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, பில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
  • விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிக்கக் கூடாது.
  • பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
  • விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே பில்வார்ச்சனை செய்யலாம்.
  • துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
  • மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
  • வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
  • அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
  • ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. பில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.
  • தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
  • வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்ந்திருந்தது, வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது, நுகரப்பட்டது, ஈரத்துணி உடுத்திக் கொண்டு கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
  • சம்பக மொட்டுத் தவிர,  வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
  • மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
  • முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா-இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
  • துளசி, முகிழ்(மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
  • பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
  • திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார  தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
  • அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
  • குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
  • பெரு விரலும் மோதிர விரலும் சேர்த்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
  • கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூபதீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்?




ண்ணனுக்கு அறிவில்லையா? அவன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம்.ஒருவன் இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் ஸ்ரீ கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர்.

வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும் ,உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்.



வாழ்க வளமுடன் 
க .செந்தில்குமார் 

ஆன்மாவைத் தெரியுமா?



ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தன்மையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும், சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.
ஆன்மாக்கள் நல்வினை, தீவினையென்னும் இரு வினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந்துழலும்.
நால்வகைத் தோற்றங்கள்:
அண்டசம், சுவேதசம், உற்பிச்சம்,சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையிற் தோன்றுவன. சுவேதசம் வியர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சுராயுசம் கருப்பையிற் தோன்றுவன.
எழுவகைப் பிறப்புகள்:
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்.
கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வியர்வையிலே கிருமி, பேன் முதலிய சில ஊர்வனவும் விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர், கொம்பு, கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம்.
தேவர்கள் பதினொரு நூறாயிர யோனி பேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிரயோனி பேதம், நாற்கால் விலங்குகள் பத்து நூறாயிரயோனி பேதம், பறவை பத்து நூறாயிரயோனி பேதம், நீர்வாழ்வன பத்து நூறாயிரயோனி பேதம், ஊர்வன பதினைந்து நூறாயிரயோனி பேதம், தாவரம் பத்தொன்பது நூறாயிரயோனி பேதம் ஆக எண்பத்து நான்கு நூறாயிரயோனி பேதம்.
ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், காது எனும் ஐம்பொறிகளினாலும் சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என ஆறு வகைப்படும். புல்லும்,மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். சிப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரதத்தையும் அறியும் ஈரறிவுயிர்கள். கரையானும், எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தகத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும், வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும், பறவையும் அந்நான்கினோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும், மனிதர்களும் அவ்வைந்தினோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.
ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும் அனுபவிக்கும். அப்படி அனுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சி நின்ற இருவினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து அவைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களை அனுபவிக்கும். இப்படியே,தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும், காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.
இப்படி பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகள் எல்லாவற்றிலும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.
இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்யும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சில காலம் வாழ்ந்து அழியினும் அழியும். மூன்று வயதுக்கு மேல் பதினாறு வயது வரையிலுள்ள பாலாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயது வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மைதான். அழியுங்காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்தச் சரீரம், உள்ள பொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

பக்திக்கு வழிகாட்டும் பெரிய புராணம்..



தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புக்கள் பல வகைப்படும். உலக மொழிகள் எதிலும் இன்று வரை காண முடியாத பொருள் அதிகாரம் பற்றிப் பேசும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ள தொல்காப்பியம் இன்றும் நமக்குக் கிடைக்கும் நூல்களுள் மிகப் பழமையான இலக்கண நூலாகும். தனித்தன்மை பெற்றுத் தொல்காப்பியம் விளங்குவது போலவே, சமய இலக்கியம் என்ற பகுதியும் தனித்தன்மையுடன் விளங்குகிறது. பக்திப் பாடல்கள் என்ற தொகுப்பைப் பெற்றுள்ள சிறப்பு உலக மொழிகள் அனைத்திலும் தமிழுக்கு கிடைத்த வாய்ப்புகள் போல வேறு எந்த மொழிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அளவு கொண்டு கணக்கிட்டால் கூடத் தமிழ் மொழியில் உள்ள பக்திப் பாடல்களின் அளவு வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழுக்கு அடுத்த இடத்தை பெறுவது வடமொழியன்று. ஹீப்ரு மொழியே என்று மொழி வல்லுநர்கள் கூறுகின்றனர். சங்க காலந்தொட்டு இடையீடு இன்றி, வளர்ந்த தமிழர் வாழ்வும், இலக்கிய வளர்ச்சியும் களப்பிரியர் இடையீட்டால் தடைப்பட்டன. மறுபடியும் அந்த வளர்ச்சியும் அதன் போக்கும் முற்றிலும் மாறி புதிய முறையில் தமிழ் இலக்கியம் வளரத் தொடங்கிற்று.
இவ்வாறு தோன்றிய புதிய வாழ்க்கைமுறை, குறிக்கோள்கள், பக்தி இயக்க காலம் என்று கூறலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை உள்ள 5 நூற்றாண்டு காலத்தை பக்தி இயக்கக் காலம் என்று கூறலாம். இந்தக் காலத்தின் தொடக்கத்தில் திருஞான சம்பந்தனார் முதன் முதலாகத் தேவாரம் பாடத் தொடங்கினார்.12 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தை இயற்றினார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் ஆழ்வார்களும் தோன்றி வைணவ சமயத்தை வளர்த்தனர்.

7-ம் நூற்றாண்டில் பல்லவ அரசு தோன்றியது. பல்லவர்கள் தொடக்கக் காலத்தில் தமிழினிடத்து எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. வட மொழியினையே ஆதரித்தனர். வேத வழக்கொடுபட்டவர்கள் வேதங் கூறும் வேள்விகளையே செய்தனர். தமிழகம் வந்து குடியேறிய வைதிகர்களின் செல்வாக்கு ஓங்கி நின்றமையின் காரணத்தால் சைவத்திற்க்கும், தமிழுக்கும் ஊறு விளைய ஏதுவாயிற்று.
புற சமயமான சைனம், பௌத்துவத்தால் இடையூறுகள் நேர்ந்தன. இந்த வைதிகர், சமணர்கள், சைனர் [களப்பிரர் மரபினர்] பௌத்தர் என்பர் அனைவரும் தமிழையும், தமிழ் நாகரிகத்தையும், தமிழ்ப் பண்பாட்டையும் ஏற்காதவர்கள். இந்நிலையில் தோன்றியவர் திருஞான சம்பந்தர். புறச் சமய எதிரிகளை வென்றதுடன் அகச் சமயமாகிய வைதிகத்தையும் எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.

சைவ சமய இலக்கியங்களில் மணிமுடியாக விளங்குகின்ற பெரிய புராணத்தைத் தோன்றிய காலச் சூழ்நிலை, சைவ சமய வளர்ச்சியில் இப்பெரும் நூலின் இடம், இலக்கிய வரிசையில் காப்பிய இடத்தினை பெறுகிறது. மாபெரும் புரட்சியைச் செய்து தமிழ் மொழியை நிலை நிறுத்தியவர் திருஞான சம்பந்தரே என்ற பேருண்மையை நமக்கு காட்டியவர் சேக்கிழார்.
தேவாரம் முதலியவற்றில் உள்ளந் தோய்ந்து இருந்த சேக்கிழார், '' நாயன்மார்களின் வரலாறு மூலம் மக்களைத் தட்டி எழுப்பி, வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களிடம் உண்டாக்கும்'' என்ற ஒரு முடிவுக்கு வந்தார். நம்பியாரூரார் பாடிய திருத்தொண்டத் தொகையின் அடிப்படையிலேயே பாட வேண்டும். முடிபும் அதை ஒட்டி வந்ததேயாகும். அதன் பயனாகத் தோன்றியது இந்தப் பெரிய புராணம்.
சென்னை நகரத்திலிருந்து பதினைந்து மைல் கல் தூரத்திலுள்ள குன்றத்தூர் சிறிய ஊர். மிகப் பழைய இந்த ஊரில் கல்வி கேள்விகளில் சிறந்த வேளாளப் பிரிவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்தார் சேக்கிழார். [ இவரின் காலம் கி.பி 1133 -1180 வரையிலாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.] சேக்கிழார் என்பது அவரின் மரபு பெயராகும். அவரின் இயற்பெயர் 'அருள்மொழித்தேவர்' என்பதாகும்.
அந்தக் காலத்தில் சோழ மண்டலத்தின் அதிபதியாயிருந்த அநபாயச் சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கன் சேக்கிழாரின் கல்வி அறிவு, ஒழுக்கங்களைக் கேள்விப்பட்டு, அவரைத் தனது தலைநகராகிய பழையாறைக்கு வரவழைத்து, தமக்கு முதல் மந்திரியாக நியமித்து, உத்தம சோழ பல்லவர் என்ற பட்டமும் கொடுத்து சிறப்பித்தான். பழையாறைக்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்து இறைவன் பேரில் ஈடுபாடு கொண்ட சேக்கிழார் பிற்காலத்தில் தன் சொந்த ஊராகிய குன்றத்தூரில் திருநாகேச்சுரம் என்னும் ஒரு கோயிலைக் கட்டி வைத்தார்.
அந்தக் காலத்தில் வெளிவந்த தமிழ்க் காப்பியமாகிய சீவகசிந்தாமணி தமிழ் உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. சோழ மன்னன் அநபாயனும் அந்தக் காப்பியத்தை இரசித்துப் படித்ததைக் கண்ட மந்திரி சேக்கிழார், சைவனாகிய தமது அரசர் சமண இலக்கியமான சீவகசிந்தாமணியில் ஈடுபாடு கொண்டிருப்பது மிகவும் கவலை தந்தது. " அரசே, சைவ சமயத்தவராகிய தங்கள் வேதத்தையும் இறைவனையும் பழிக்கும் சமண இலக்கியத்தைப் படிப்பது பொருத்தமல்லவே " என்று சொன்னார்.
அநபாயனுக்கு இது தெரியாததல்ல. "சமணர்கள் செய்தது போல நமது சைவர்கள் ஒன்றும் செய்யவில்லையே, அப்படியான சிவ சரிதம் ஏதாவது உண்டா?" என்று கேட்டான்.
சிவனது பெருமையைப் பேசும் தொண்டர்களைப் பற்றி தேவார நாயன்மார்களில் ஒருவராகிய சுந்தர மூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தில் அறுபத்து மூன்று தனி அடியார்களைப் பற்றியும் மற்றும் சில தொகை அடியார்களைப் பற்றியும் எடுத்து கூறினார்.
சிவன் நாமத்தை மட்டும் மறவாது வழிப்பட்டு வந்தபோதும், அச்சமயம் சோழ மண்டலத்தில் சமணம், பௌத்தம், சைவம் போன்ற சமயங்கள் சமய பூசல்கள் காரணமாக ஒன்றுக் கொன்று போட்டி போட்டுக் கொண்டு செல்வாக்கை தேட ஆரம்பித்தன.
இருண்ட காலத்தில் போய்க்கொண்டு இருந்த சைவ சமயத்தைக் காப்பாற்றி கரையேற்ற எண்ணங் கொண்ட சேக்கிழார், முதலில் சமய நூல்களில் மனதைப் பறிகொடுத்த மன்னரையும், மக்களையும் காப்பாற்ற எண்ணங் கொண்டார். தனது அறிவாற்றல் மூலம் சைவ சமயத்தின் சிறப்பியல்களையும், அது தன்னகத்தே கொண்டுள்ள அறிய கருத்துக்களையும், கருத்து சொறிந்த நூல்களளையும், சிவநெறி நின்ற சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கதை உருவில் மிகச்சுவைபடக் கூறி, மன்னரையும், மக்களையும் தன் வசமாக்கினர்.

மனுநீதி கண்ட சோழர், அமர் நீதிநாயனார், திருநாவுக்கரசு, திருஞான சம்பந்தர், சுந்தரர் போன்ற சிவனடியார் வாழ்க்கை வரலாறு எல்லாம் சேக்கிழார் வாயிலாக கேட்டு களிப்படைந்த அனபாய சோழர் சேக்கிழாரிடம் " அமைச்சரே, சைவமும், தமிழும் என்றும் தழைத்தோங்க கூடிய கருத்துக்களை எல்லாம் ஒன்றாக்கி, என்றும் அழியாப் புகழ் தரக்கூடிய புராணம் ஒன்றினை செய்தருள வேண்டும்" என விழைந்தான்.

"அந்த அற்புதமான அடியார் சரிதங்களை எல்லாம் இலக்கிய நயம்பட ஒரு பெருங்காப்பியமாக அருளினால் தமிழ் மக்கள் சிறப்பாகச் சைவ நன்மக்கள், படித்து ரசிக்க வாய்ப்பளிக்கும். இலக்கிய விற்பன்னராகிய தாங்களே அதைச் செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டான்.
அருள்மொழித் தேவராகிய சேக்கிழார் மகிழ்ந்து அந்த அன்பு கட்டளையினை ஏற்றுக் கொண்டு "பெரிய புராணம்" என்னும் பெருங்காப்பியத்தைப் பாடினார்.

இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று, அவனாலேயே அடியெடுத்துக் கொடுக்கப் பெற்றுச் சுந்தரர் பாடிய பாடலிலேயே குறுகிய வட்டத்தை விட்டு அனைத்துலத்தையும் அணைத்துக் கொள்ளும் பார்வை இருப்பதைச் சேக்கிழார் அறிந்து கொள்கிறார். சேக்கிழாருக்கு கூட அடியெடுத்துக் தந்த இறைவன் '' உலகெலாம்'' என்றுதான் அடியெடுத்துத் தந்தான். அதில் சைவர்கள் என்றில்லாமல் உலக முழுவதிலும் எல்லாக் காலத்திலும் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப்போகும் மக்கள் இலக்கணத்தை வகுத்துள்ளது

சிதம்பரம் வந்து , கனகசபையில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமானை வணங்கி நின்று சிந்தித்த போது, இறைவனே முன் வந்து " உலகெலாம் '' என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்க அருளினார். அதன்படியே,
உலகெலாம் உணர்ந்து ஓதற்க்கு அரியவன்... '
நீர்மலி வேணியன் அழகில் சோதியன்
அம்பலத்து இடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"

-என்ற காப்புச் செய்யுளுடன் தொடங்கி,

''என்று மின்பம் பெருகு மியல்பினால்
ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட
மன்று ளாரடி யாரவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.''

-என்ற வார்த்தையுடன் சிதம்பரம் பொற்றாமரை வாவிக்குப் பக்கத்திலுள்ள ஆயிரக்கால் மண்டபத்திலிருந்து, அற்புதமான தமது பெரிய புராணத்தைப் பாடி முடித்தார்.

சிதம்பரத்தில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து பெரிய புராணக் காப்பியம் பாடி முடித்தவுடன் சோழ மகாராஜா தாமே நேரில் சென்று தமது பட்டத்து யானையில் சேக்கிழாரையும் பெரிய புராணக் காப்பிய ஏட்டையும் அமர்த்தி, புலவர் பின்னால் தாம் உட்கார்ந்து சாமரம் வீசி ஊர்வலம் வந்தான். மந்திரி பதவி பெற்றிருந்த சேக்கிழார், பதவியைத் துறந்து, சிதம்பரத்தில் தானே வீற்றிருந்து இறைபணி செய்து வந்தார். அநபாயச் சோழன் அவருடைய பாராட்டி "தொண்டை சீர் பரவுவார்''  என்ற பட்டம் சூட்டி வாழ்த்தினான். இவரின் பெரும் முயற்சியால் நாம் அறுபத்திரண்டு நாயன்மார்களைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது.

சேக்கிழார் சிவநேயச் செல்வர். சிவ திருவடிகளின் நிழலே சரண் எனப் புகுந்தவர். சிவனின் இன்னருளிலேயே தோய்ந்து திளைத்தவர். அந்த நிலை தளராத முயற்சியால் பலருக்கு கிட்டுவது என்றாலும், சேக்கிழார் இந்த நிலைக்கு மேலே சென்று விடுகிறார். காணும் பொருளிலே சிவத்தை காணும் உன்னத நிலையை அடைகிறார். அந்த உயர்ந்த, பக்குவப்பட்ட நிலையில் அவருடைய உள்ளம் முகிழ்ந்திருந்த போதே பெரிய புராணம் மலர்ந்துள்ளது. அதனால்தான் அவ்வளவு பெரிய உள்ளங்களை எல்லாம் சேக்கிழாரால் கவிதைகளில் கொண்டு வர முடிந்தது. இதனை பெரிய புராணம் இலை மறை கனியாகக் காட்டுகிறது.

"இறைவன் அடியெடுத்துக் கொடுத்துப் பாடுக என்றமையால்தான் யான் பாடுகிறேன்''
-என்ற கருத்தில்...

"அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும்
தெருளில் நீர் து செப்புதற்கு ஆன் எனின்
வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய
பொருளின் ஆகும் எனப்புகல்வாம் அன்றே"
-என்று கூறுவது இவர் அருள்வழி நின்று இதனைப் பாடலுற்றார் என்பதற்கு அகச் சான்றாகும்.

இளம் பிராயம் முதல் சிவபிரானிடம் மாறாத பக்தியும், தணியாத பாசமும் கொண்டு சிவ நேசராக விளங்கிய சேக்கிழார் கல்வி கேள்விகளிலும் தமிழ் இலக்கியங்களிலும், செய்யுள் வடிப்பதிலும் சமயப் பேரறிஞர்களும் பாராட்டி போற்றும் அளவுக்கு தன்னிகரற்று விளங்கினார். சேக்கிழார் புதுவழியை வகுத்துக் கொண்டு, தொண்டு என்ற பண்பைக் காப்பியப் பொருளாக்கித் தொண்டர்கள், பக்தர்கள் என்பவர்கள் தூய பக்தி மனப்பான்மையுடன் வாழ்க்கை நடத்தும் போது எப்படி எல்லாம் செயல்படுவார்கள் என்பதை விளக்கினார். மிக உயர்ந்த இந்தக் கருத்து எல்லாம் மக்களிடமும் சென்று பரவவேண்டும் என்று கருதினார் சேக்கிழார். எனவே அவருடைய பெரிய புராணம் அனைத்து உலகத்தையும் தழுவும் பண்பு கொண்டு அமைந்து விட்டது.

"கற்பனை கடந்த சோதி, திருசிற்றம் போற்றி போற்றி" என்று தெய்வ மணம் கமழ பாடிய சேக்கிழாரை தொடர்ந்து பார்க்கலாம்.
இனி சில பெரிய புராண பாடல்களை பார்ப்போம்:
பன்னிரெண்டாம் திருமுறையில் :-

"வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை
விளங்கப் பூதபரம்பரை பொலியப் புனித வாய்
மலர்ந்தழுத சீதவள வயற்புலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக் கொண்டு திருதொண்டு பரவுவாம்"
- என்கிறார்.

வேத நெறிகள் தழைக்கவும், சைவ சித்தாந்த சமயம் விளங்கவும், பாண்டியன் வெப்ப நோயை நீக்கி, சமணரை வென்று சைவ சமயத் தொண்டினை பரவச் செய்ய அவதாரம் புரிந்தார் என்பதையும் சித்தரிக்கிறார்.

திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் இறைவனை நேரே கண்டு பாடியதுடன் மக்கள் துயர் துடைக்கும் பணியில் முழு மனதாக ஈடுபட்டனர் என்பதையும் சேக்கிழார் விளக்குகிறார். நாவரசரும், ஞான சம்பந்தரும் திருவீழிமிழிலைக்கு செல்கின்றனர். அந்த நேரத்தில்,
"மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி
மன்னுயிர்கள் கண்சாம்பி உணவு மாறி,
விண்ணவர்ககும் சிறப்பியல் வரும் பூசை யாற்றா
மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு
கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்குங்
கவலை வருமோ?"
-என்று கருதினார்களாம். இவ்வாறு நினைத்த அவர்கள் மக்களைப் பார்த்து ''நீங்கள் இறைவனை வழிபடுங்கள் விரைவில் வளம் பெருகும்'' என்று கூறாது, பஞ்சத்தால் மக்கள் படும் துயரத்தைக் கண்டு மனம் வருந்தி அன்றிரவு துயில்கையில், கனவில் இறைவன்,

"உலகியல் நிகழ்ச்சியால் அணைந்த தீய
உறுபசி நோய் உமையடை யாதெனினும் உம்பால்
நிலவு சிவநெறி நித்தம் ஒரோர் காடு நீடும்
லகுமணி பீடத்துக் குணக்கும் மேற்கும் யாம்
அளித்தோம் உமக்கு"
-என்று கூறி அவ்வாறே காசும் அளித்தான்.

இறைவன் தந்த பொற்காசை மாற்றி பசித்தோர் அனைவரும் வந்து உண்ணலாம் என்று அறிவித்தனர்.
'' நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும்
உண்பதற்கு வருக என்று
தீதில் பறை நிகழ்வித்து.....''
அழைத்தார்கள்.

அவர்கள் கூறிய சொற்கள் ஊன்றி கவனிக்க வேண்டியவைகள். ' இறைவனால் அருள்செய்யப் பெற்ற உயிர்கள்' என்று பொருள். இறைவனால் படைக்கப் பெற்ற எல்லா உயிர்களுக்கும் வேறுபாடு காட்டாமல் அவன் அருள் செய்கிறான். எனவே அனைவருக்கும் வேறுபாடின்றி உணவு தந்தார்கள் என்ற நுண்ணிய கருத்தை அழகாக நுணுக்கமாவும் தருகிறார் சேக்கிழார்.

வனவேடரான கண்ணப்பரது செருப்படியை இறைவன் ஏற்றுக் கருணை புரிந்தது போல, சாக்கிய நாயனார் ஒப்பற்ற அன்பினால் கல்லெறிந்து வழி பட்டதையும் விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதை சேக்கிழார் தமது பாடல் மூலம்,
'கல்லாலே எறிந்தததும் அன்பானபடி காணில்
வில்வேடர் செருப்படியும் திருமுடியின்மே வியுறால்,
நல்லார் மற்றவர் செய்கை அன்பாலே நயந்ததனை
அல்லாதார் கல்லென்பார் அரனார்க் கல்பவராமல் ..."
-என்று பாடுகிறார்.

திருத்தொண்டர் தொகை எனும் வரலாற்று நூலைத் தரவும், மாதவம் செய்து தென் திசை வாழவும்,
சைவம் தழைக்கவும் உலகுக்கு சுந்தரரை இறைவன் அனுப்பினார் என்பதை,

' மாதவஞ் செய்து தென் திசை வாழ்ந்திடத்
தீதிலாத் திருத்தொண்டர் தொகை தரப்போதுவராவர் "

-என்று சுந்திரரின் அவதாரத்தினை குறிக்கிறார்.

"மானிடராகப் பிறந்தால் இறைவனிடம் அன்பு கொண்டு என்றும் மறவாமல் இருக்க வேண்டும்" என்பதை சேக்கிழார்,

"இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டுகிறார் பிறவாமை வேண்டும்,
மீண்டும் பிறப்புண்டேல் உன்னை
என்றும் மறவாமை வேண்டும்,
இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி !
நீடும் போதுன் அடியின் கீழ் இருக்க " [திருநாட்டுச் சிறப்பு]
என்கிறார்.

- கவிதையை அழகு படுத்துவது உவமையணி என்றாலும் கூட , அந்த உவமையணியைப் போல் கவிஞனின் உள்ளத்தினைப் புலப்படுத்துவது வேறொன்றுமில்லை. கவிஞன் தான் விளக்கப் புகுந்த பொருளை தான் அறிந்தும் தனக்கு மிகப் பிடித்த அல்லது பழக்கமான பொருளைக் கொண்டு விளக்கிக் காட்ட முயல்வான். அப்போது அவனை அறியாமல் அவன் உள்ளத்தோடு இணைந்து விட்டவை உவமை வாயிலாக வெளிப்படும்.

சேக்கிழாரும் அங்கும் இங்குமாக அவர் பயன்படுத்திய உவமைகளும், அவர் உள்ளப் பாங்கைக் காட்டுவதாக அமைகிறது. நெற்பயிர்கள் தம்மை ஒப்பாரும் மிக்காரும் இன்றிச் கருவுற்றி, முதிர்ந்து பசலைக் கொண்டு, சுருள் விரிந்து இலர்கின்றன். சேக்கிழார் மனதில் நெற்கதிர்களைப் போலச் சிந்தை மலரும் சிவனடியார்களின் நினைவு மலர்கிறது.

"சாலிநீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு
வாலிதம் வெண்மை உண்மைக் கருவினும் வளத்த வாகிச்
சூல்முபிர் பசலை கொண்டு சுருள்விரித் தரனுக் கண்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்கலெல்லாம் " [திருநாட்டுச் சிறப்பு.]

அடுத்து முற்றிய அந்த நெற்கதிர்களைப் பார்க்கிறார். அவை தலை தாழ்த்தி வணங்குவன போல் காணப்படுகின்றன. அவை தன் முனைப்பற்றுப் பணிவோடு நிலை கண்டவுடன் அவர் உள்ளத்தே ஒரு கற்பனை விரிகிறது.

ஞான சம்பந்தரும் அப்பரும்சந்திக்கும் போது எப்படி இருப்பார்கள், சேரமான் பெருமானும் சுந்திர மூர்த்தி நாயனாரும் சந்தித்த போது எப்படி இருந்திருப்பார்கள் என்ற கற்பனை அது.

தன்முனைப்பற்று இறையன்பிலேயே தினைத்திருந்த அவர்களும் இப்படித்தான் வணங்கி இருப்பார்கள் என்ற தெளிவு ஏற்படுகிறது. அந்தத் தெளிவில், முதிர்ந்த கதிர்களின் வணக்கத்துத் தாம் சிந்தையில் கண்ட காட்சியையே உவமையாக்கி விடுகிறார்.
"பத்தியின் பால ராசிப் பரமனுக் காளாம் அன்பர்
தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்கு மாபோல்
மொய்த்த நீள்பத்தியின் பால் முதிர் தலை வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி எல்லாம் "    [திருநாட்டு சிறப்பு]
மற்றொரு சிந்தனை. காவிரியில் நீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு ஓடுகிறது. கரையோரத்தில் இருந்த மரங்கள் சொரிந்த மணமுள்ள மலர்களை எல்லாம் அள்ளிக் கொண்டு செல்கிறது. இவ்வாறு செல்கின்ற காட்சி, கரை ஓரத்தில் இருக்கும் சிவன் கோயில்களில் காவேரியானது மலரும், நீரும் கொண்டு அஞ்சலி செய்வது போல இருக்கிறது. இச்செய்கையால், மலரும் நீரும் கொண்டு சிவபெருமானை வழிபடும் அன்பருக்கு காவேரியாறு நிகர் என்று கூறுகிறார் சேக்கிழார்.
"வம்பு வாமலர் நீரால் வழிபட்டுச்
செம்பொன் வார்கரை யெண்ணிலி சிவாலயத்
தெம்பி ரானை யிறைஞ்சலின் ஈரம்பொன்னி
உம்பர் நாயகர்க் கன்பரும் ஓக்குமால். "

கவிதை தோன்றிய நாள் முதற் கொண்டு, கவிஞர்களின் கற்பனைக்கு வளம் தந்து இன்பம் தருவன நிலவும் பெண்ணும். இந்த இரண்டையும் பாடாத கவிஞர் இருப்பாரா என்பது ஐயத்திற்குரியது. இல்லை என்றே கூறலாம். அந்த இரண்டைப் பற்றியும் பாடும் போது சேக்கிழார் தனித்து நிற்கிறார். அத்தோடு மட்டுமின்றி அவற்றைப் பாடும் போது சேக்கிழார் தம் உள்ளத்தில் கனிந்த இறையன்பைக் காட்டுகிறார்.
வானிலே நிலா உலா வந்து கொண்டிள்ளது. அதனுடைய தூய்மையும் இன்பமும் குளிர்ச்சியும் மண்ணுயிர்களை எல்லாம் ஓம்புகின்றன. நிலாவின் இயல்புகள் சேக்கிழாருக்குத் திருநீற்றின் நினைவைக் கொண்டு வருகிறது. தூய்மை, இன்பம், தன்மை ஆகிய மூன்றும் திருநீற்றிற்கும் உரிய இயல்புகள் தாமே ?
அந்த சிறப்பான பாடல் :

" தோற்றும் மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே
சாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய்
இற்றி அண்டமெலாம் பரந்தண்ணல் வெண்
நீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா. "  [திருத்தாட்தொண்ட புராணம்]
காதல் சுவையினையும் இறைவன் திருவருள் நயத்துடன் உரைக்கிறார். காதலியைக் கண்ட அளவிலே, காதலன் உள்ளத்தில் எழும் இன்ப உணர்ச்சிகளும் அவள் அழகு தோற்றமும், கவிஞர்களுக்கு இடையறாத கற்பனை ஊற்றாய் விளங்குகிறது பரவையாரை முதன் முதலில் பார்த்தவுடன் சுந்தரர் உள்ளத்திலும் அத்தகைய இன்ப அலைகள் எழுந்து ஆர்ப்பரிக்கின்றன. பரவையாரின் எழில் சுந்தரரை மயக்குகிறது. இப்படியும் ஒரு பெண்ணெழில் உண்டா என வியக்கிறார்.
"கற்பக் தருவின் பூங்கொம்போ ?
காதல் கடவுளாகிய காமனுடைய பெரு வாழ்வே இவ்வெழில்
வடிவமாக வந்து நிற்கின்றதோ ?
புயல், வில், குவளை, பவளமலர், நிலா முதலிய அனைத்தும்
ஒரு சேர பூத்த மணமிக்க கொடியோ ?
-என்றெல்லாம் அவர் மனதில் எண்ணங்கள் ஓடுகின்றன. அந்த கற்பனை எல்லா கவிஞர்களுக்கும் ஏற்படும் நிலையில்தான் சேக்கிழாரும் நிற்கிறார். ஆனாலும், வாதம் செவ்விய உள்ளத்தையும் நுண்மையும் காணலாம். அது "சிவனுடைய அருளோ? " என்பதுதான் அக்கேள்வி.
சுந்தரின் மனதில் ஏற்படும் இந்த வியப்பை எல்லாம் இப்படி கவிதையாக வடிக்கிறார்.

" கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ யாதொவென்று அதிசயித்தார் " [தடுத்தாட் கொண்ட புராணம்]

இவ்வாறு காண்கிற காட்சிகளில் மட்டுமன்றி, நடக்கின்ற செயல்களிலும் இறைவனின் திருவருளையே காணும் பக்குவ உள்ளம் சேக்கிழாருடையது என்பதற்கு பெரிய புராணம் ஒரு சான்று.

நகைச்சுவை வைத்துப் பாடுவது எளிதாகும்.ஆனால் அதனுள்ளும் ஆழமான கருத்தமையப் பாடுவது கடினம். ஒற்றியூரில் புற்றிடங் கொண்டாரைப் பணிந்து சங்கிலியை மணம் முடித்து தருமாறு சுந்தரர் வேண்டுகிறார் என்று சேக்கிழார் நகைச்சுவை பொருந்த ஒரு பாடலை அமைத்துள்ளார்.

''மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீர் முடிவின் கண்
கங்கை ஒருபால் கரந்தருளும் காதலுடையீர்; அடியேனுக்கு
இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் உள்ளத் தொடை அவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தம் தீரும்."
-என்ற இந்தப் பாடல் முதல் இரண்டடிகளில் நகைச்சுவை நிரம்பி மிளிர்கின்றது.
இறைவன் உதவி கொண்டு திருவாரூரில் பரவை மணந்து இன்பமாக வாழும் சுந்தரர் மறுபடியும் ஒரு பெண்ணைத் தர வேண்டுமென்று கேட்டால் சற்று அதிகமானதுதான். அவ்வாறு கேட்க முடியாமல் செய்ய ஒரே வழி "நான் கேட்டது ஒருபுறம் இருக்கட்டும், நீயே இரண்டாவது மனைவி ஒருத்தியை மறைவாய் தலையில் வைத்துள்ளாயே!" என்று கூறுவதுதான். வரப் போகும் வினாவை எதிர்பார்த்து அதற்கும் சேர்த்து விடை கூறுவது போல "பாகத்தில் ஒருத்தியை வைத்து போதாதென்று தலையிலும் ஒருத்தியை மறைத்து வைத்துள்ளவரே!' என்றே விளிப்பது கருத்துடை அடைமொழி ஆகும். அதை விடவும் அதில் ஒரு சிறப்பு உள்ளது. "கரந்தருளும் காதல் உடையீர்!" என்று கூறும் பொழுதே "நான் உம்மைப் போல் மறைவாக வைத்து வாழ விரும்பவில்லை. ஊரறிய மணஞ் செய்து கொள்ளவே விரும்புகிறேன்" என்ற கருத்தும் தொக்கி நிற்கக் காண்கிறோம்.

அழுகை சுவையும் ஒரு பாடலில் காண்கிறோம். இளிவு, இழவு, அசைவு, வறுமை என்ற காரணங்களால் இச்சுவை பிறக்கும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
எளியார் முறையிட கூடிய ஒரே இடம் இறைவன். திரு மருகல் பெண்ணின் அழுகை இது. தனிப்பட்ட ஒரு பெண் தன் காதலனுடன் 'உடன் போக்கு மேவ, இடைவழியில் அவன் அரவு தீண்டி இறந்துபட, புலம்பி அழுகின்றாள். இறப்பு என்பது நீக்க முடியாதது என்பதை அப் பேதைப் பெண் நன்கறிவாள். ஆனாலும் திருமருகலில் உள்ள இறைவனிடம் தன் துயரை வெளியிடுகிறாள். விண்ணப்பம் செய்யும் முறையில் அவள் அழுகை வெளிப்படுகிறது.
"அடியாராம் உமையவர் தம் கூட்டம் உய்ய
அலைகடல்வாய் நஞ்சுண்ட அமுதே! செங்கண்
நெடியோனும் நான்முகனும் காணாக் கோல
நீலவிட அரவணிந்த நிமலா! வெந்து
பொடியான காமன் உயிர் ரதிவேண்டாப்
புரிந்தளித்த புண்ணியனே! பொங்கர்வாசக்
கடியாரும் மலர்ச்சோலை மருங்கு சூழும்
கவின் மருகல் பெருமானே! காவாய் என்றும்..!

வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேல் சீறி
வருங்காலன் பெருங்கால் வலயம் போலும்
செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரியகோலம்
சிதைந்துருள உதைத்தருளும் செய்ய தாளா!
இந்தவிடக் கொடுவேகம் நீங்குமாறும்
யான் டுக்கண் குழிநின்றும் ஏறுமாறும்
அந்திமதிக் குழவி வளர் செய்யவேணி
அணிமருகல் பெருமானே! அருளாய்"

-என்ற அடிகளில் தன் வாழ்வு பாழாகி விட்டதற்கு அப்பெண் மனம் உருகிக் கதறுகின்றாள். ஆனால் தன்னலத்தின் அடிப்படையில் தோன்றிய அழுகையாயினும் சேக்கிழார் கையில் அந்த அழுகை புதியதோர் வடிவு எடுக்கின்றது.
காணும் காட்சிகளிலும் நடக்கும் செயல்களிலும் இறைவனின் பேரருளைக் கண்ட சேக்கிழார், தீயதை நெஞ்சினால் நினைக்கவும் பெறாத சான்றோர். அடியவர்களின் கதைகளைப் பாடும் நூலில் அமங்கலமாகச் சொற்களை போடமல் மங்கலச் சொற்களாலேயே தாம் சொல்ல வந்ததைச் சேக்கிழார், முத்தநாதன் மெய்ப்பொருள் நாயனாரை வஞ்சித்துக் கொல்ல எண்ணித் திருக்கோவலூர் சேர்ந்ததை,
"அற்றத்தில் வெல்வானாச் செப்பரு நிலைமை
எண்ணித் திருகோவலூரிற் சேர்வான் "
-என்றே சேக்கிழார் குறிப்பிடுவதுடன் அவன் தான் எண்ணியதை முடித்தவுடன் தான் முன் நினைந்த அப்பரிசே என்றே குறிப்பிடுகிறார். அத்துடன் பரத்தையர் குலத்தைக் கூடப் பண்புடன் பதியிலார் குலம்"என்றே தம் புராணத்தில் சொல்லியுள்ளார்.
சேக்கிழார் சிவபெருமானிடம் இடையறாத அன்பு பூண்டவர். அதே போல் சிவத்தொண்டர்களிடம் வற்றாத அன்பு பொங்கும் நெஞ்சினர். அன்பே உருவாக, அருளே உயிராய் இயங்கும் சான்றோர். நடக்கின்ற செயல்களில் எல்லாம் இவ்வாறு இறைவன் திருவருளையே காணும் சேக்கிழார், செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அவனை நினைந்து பணித்திருக்கிறார். அவரின் ஒரு பாடல் இதனைக் காட்டுகிறது.
கம்பர் காப்பிய நாயகன் ஈடு இணையற்ற மன்னன். ஒருத்தியுடன் வாழ்வதே இன்பம் என்று நினைப்பவன். தந்தை மாறுபட்ட வாழ்வை நடத்தியவன். எனவே அவனுடைய நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெறுகிறது. புலனடக்கம், நல்லொழுக்கம் என்பவற்றின் உறைவிடமாய், அறத்தின் மூர்த்தியாய், ஒருவன் தோன்றப் போகும் நாட்டைக் கூற வருகின்றான் கவிஞன். முதற்பாடல் அவனுடைய காப்பிய தலைவன் பண்பாட்டைக் கூறுவது போல அமைந்துள்ளதைக் காணலாம்.

"ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காக அலம்பும் முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை நாட்டணி கூறுவாம்"
-என்று தொடங்கும் கம்பனின் பாடலில் தன் காப்பியத்தின் உள்ளீடு நுண்மையாக கூறுகிறது.

இதே போன்று சேக்கிழாரும் தம் காப்பியத்தின் முதற் பாடலில் கயிலை மலையை வருணிக்க புகுகின்றார்.

"பொன்னின் வெண்திரு நீறுபிணைத்தெனத்
தன்னை யார்க்கும் அறிவரி யான் என்றும்
மன்னி வாழ் கயிலைத்திரு மாமலை"
-என்ற இப்பாடலில் தன்னை யாரும் அறிவரியானுடைய சிறப்புதனை கூறும் காப்பியம் என்பதை நுண்மையாக அறியுமாறு செய்கின்றார்.
" நின்றாலும் ருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் மைத்தாலும்
மன்றாடு மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை
குன்றாத உணர்வுடையார் தொண்டராங் குணமிக்கார் "
-இவை அனைத்தும் ஒரு சேர பார்க்கும் மகா வித்துவான் மீனாட்சி சுந்திரம் பிள்ளை,

" பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ "
' தெய்வ மணக்குஞ் செய்யுளெலாம் '
' சிவ மணக்குஞ் செய்யுளெலாம்'
- என்கிறார்

''அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கிய விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்து எய்தும் பராபரமே ''
- என்று பாடிய தாயுமானவரின் பாடலுக்கு ஏற்ப தனது வாழ்நாள் அனைத்தும், தமிழும் வளர, உலகில் சிவநெறி தழைத்தோங்க, சைவ சமயத்தில் பிடிப்பு உணர்வு உண்டாக்கி, மக்களை பக்தி சுவையில் ஈடுபடுத்திய பெருமை சேக்கிழாரை சாரும். தமிழர்களின் தனிப்பெரும் பேரிலக்கியமும் ஞான நூலுமாகிய பெரிய புராணம் வாய்மை நிறைந்த நூலாகும்.