செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தத்துவம் உதிர்க்கிறார் வியாசர்....







எப்போது ஒருவன் தனது மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தையும் தூக்கி எறிகிறானோ, அப்போது தான் ஞானம் உடையவனாகிறான்.

ஞானி என்பவன் தான் காணும் காட்சி அனைத்தையும் தெய்வகாட்சியாகவே காண்பான். நல்லது, கெட்டது, உயர்வு, தாழ்வு என்ற வேறுபாடுகள் அவனுக்கு இருப்பதில்லை.

எண்ணங்கள் ஆக்கவும், அழிக்கவும் வல்லவை. நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனை அடியோடு அழித்து விடுகின்றன.

சுக்கான் இல்லாத படகு இலக்கை அடைவதில்லை. அதுபோல, திசையில்லாத மனம் கடவுளை அறிந்து கொள்வதில்லை.

புலன்களின் ஆதிக்கத்தில் வாழும் வாழ்க்கை இவ்வுலகத்திற்கு சம்பந்தமானது. புலன்களை நம் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவதே ஆன்மிக வாழ்க்கை.

கடவுளுக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பக்கட்டம். ஞானம் முதிரும்போது பயம் அன்பாக மாறிவிடும். பூரண அன்பு என்பது பயத்தை முழுமையாக புறக்கணித்துவிடும்.

கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் பிரசாதம் சாப்பிடுவதன் மூலம் ஒருவனின் மனம் தூய்மை அடைகிறது.

ஆணவமும், மோகமும் இல்லாதவர்கள், இன்பம், துன்பம் என்னும் இருநிலைகளைக் கடந்தவர்கள், ஆசைகளை அறவே ஒழித்தவர்கள், மெய்ஞானம் அடைந்தவர்கள் அழிவில்லாத ஆனந்தமாகிய கடவுளை அடைகிறார்கள்.

பணக்காரனுக்கும் ஏழை எளியவரைப் போலவே வாழ்வில் துன்பங்கள் உண்டாகின்றன. ஏழை பணத்திற்காக அலைகிறான். பணக்காரன் நிம்மதி தேடி அலைகிறான்.

மகிழ்ச்சியில் தொடங்கி, மகிழ்ச்சியில் வசித்து, மகிழ்ச்சியில் அடங்கிப்போவதே உயர்ந்த வாழ்வாகும்.

ஒருவனுடைய மனதில் இருக்கும் விருப்பும், வெறுப்பு எண்ணங்களே சுகதுக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன.

உலகில் அனைத்து விஷயங்களும் தெரியும், தெரியாது என்ற இருவகைக்குள் அடங்கி விடும்.

செல்வத்தால் இன்பம் பெறுவதைக் காட்டிலும், துன்பத்தையே அதிகமாக்கிக் கொள்கிறோம். சிரிப்பவனை பணம் அழ வைத்துவிடும், அழுபவனை சிரிக்க வைத்து விடும்.

மனிதன் எதைக் கண்டாலும் உடனே அதை அடையத் துடிக்கிறான். அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் உண்டாகிறது. அந்த ஆசையே பாதி அவதிக்கு காரணமாகும்.

உலகில் மனிதன் ஒரு பங்கு இன்பத்தைப் பெறுவதற்காக ஒன்பது பங்கு துன்பத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறான்.

வெறும் மன உணர்ச்சிகளுக்கு ஆளாகி வாழும் மனிதன் மிருகங்களுக்குச் சமமானவன்.

உணர்ச்சிவயப்பட்டு கொந்தளிக்கும் குணம் கொண்டவர்களைத் துன்பம் நிழல் போலப் பற்றிக் கொள்ளும்.

வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவத்தின் மூலமும் மனிதன் வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

கண்ணன் என்னும் பிரம்மச்சாரி...







கண்ணனுக்கு பல மனைவியர். இருந்தாலும், அவர் தன்னை பிரம்மச்சாரி என்கிறார். எப்படி? யமுனைக்கரையில் இருந்த ஒரு மாளிகையில் கண்ணனும், ருக்மிணியும் தங்கியிருந்தனர். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மறுகரையில், கண்ணனின் பக்தரான துர்வாச முனிவர் நல்ல பசியுடன் காத்திருந்தார். பக்தனின் பசி பொறுக்காத கண்ணன், ""ருக்மிணி! என் பக்தர் துர்வாசர் கடும்பசியுடன் அக்கரையில் காத்திருக்கிறார். நீ போய் உணவு பரிமாறி விட்டுவா,'' என்று உத்தரவிட்டார்.""சுவாமி! ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருக்கிறதே! எப்படி கடந்து செல்வது?'' என்றாள் அவள்.
""நீ யமுனையின் அருகில் போய், "நித்ய பிரம்மச்சாரியான கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு உணவளிக்க என்னை அனுப்பியுள்ளார். எனவே நீ வழிவிடு'< என்று சொல். ஆறு இரண்டாகப் பிரிந்து வழிவிடும்,'' என்று பதிலளித்தார் கண்ணன்.
"என்ன சொல்கிறார் இவர்! பல மனைவியருடன் வாழும் இவரா பிரம்மச்சாரி! எதற்காக இப்படி சொல்கிறார்?' அவள் குழம்பியபடியே, கிருஷ்ணர் சொன்னதைச் செய்தாள்.
யமுனையும் வழிவிட்டது. அவள் போய் வந்ததும், அவளது முகக்குறிப்பைக் கொண்டே அவளது சந்தேகத்தைப் புரிந்து கொண்ட கண்ணன்,""யார் ஒருவன் உலகமக்களைப் பக்தி வழியில் திருப்ப முயற்சிக் கிறானோ அவன் பிரம்மச்சாரியாவான். அந்தப் பணியை நானும் செய்கிறேன். எனவே, நானும் பிரம்மச்சாரி தான். இதை யமுனை புரிந்து கொண்டு வழிவிட்டது,'' என்றார். பக்தி நெறியில் உங்கள் மனதைச் செலுத்துவதுடன், பிறருக்கும் வழிகாட்டுங்கள். புரிகிறதா
!

போதும் என்ற திருப்தி கிடைப்பது எப்போது? - விளக்குகிறார் காஞ்சிப்பெரியவர்..





எல்லா தானங்களிலும் அன்னதானம் விசேஷம்.


 பகவானும் கீதையில், ""எவன் தனக்காக மட்டும் 


ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ, 


அவனுடைய பாவத்தையும் முழுக்க அவனே தான் 


அனுபவித்தாக வேண்டும். வேறு யாரும் அதில் 


பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள்,'' என்கிறார். 


அன்னதானத்துக்கு என்ன விசேஷம் என்றால், 


இதிலே தான் ஒருத்தரைப் பூரணமாகத் 


திருப்திப்படுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், 


நகை, பூமி, வீடு இந்த மாதிரியானவற்றை எவ்வளவு 


கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்கு 


மேல் தந்தாலும் போதும் என்று சொல்ல மாட்டான். 




அன்னம் போடுகிற போது தான், ஒருத்தன் என்ன 


தான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும் ஓர் அளவுக்கு 


மேல் சாப்பிட முடியாது. 

நேராக உயிரோடு உடம்பைச் சேர்த்து வைத்து 


ரட்சிப்பதும் அன்னம் தான். அதனால் தான், "உண்டி 


கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்று சொல்வர். 


மணிமேகலை என்னும் காப்பியம் இப்படி 


அன்னதான விசேஷத்தைச் சொல்லியிருக்கிறது. 


மணிமேகலைக்கு காஞ்சியில் அட்சயபாத்திரம் 


கிடைத்து, அவள் அதை வைத்துக் கொண்டு சகல 


ஜனங்களின் பசிப்பிணியைப் போக்கினாள். 




இதற்கு அநேக யுகங்கள் முந்தியே சாக்ஷõத் 


அம்பாளும் இதே அன்னதானத்தை இங்கு 


பண்ணியிருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, "இரு நாழி 


நெல் கொண்டு எண்நான்கு அறம் இயற்றினாள்' 


என்று சொல்லியிருக்கிறது. இங்கே அன்னபூரணிக்கு 


சந்நிதி இருக்கிறது.