செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




புதன், 11 மே, 2011

ஜேய் உச்சினி மாகாளி!...

உஜ்ஜயினி என்னும் நகரம் மத்திய பாரதத்தில் இருக்கிறது.
                இது மிகவும் புராதனமான நகரம். விக்கிரமாதித்தனின் தலைநகரம் என்று இதனைச் சொல்வார்கள். பின்னர் சாலீவாகனன் என்பவன் இதனைக் கைப்பற்றிக ்கொண்டதாகவும் சொல்வார்கள். அதன்பின்னர் போஜ மன்னனும் காளிதாசன் முதலிய பல புலவர்களுடன் அங்கிருந்ததாகச் சொல்வார்கள்.


                வரலாற்றில் அது மகதப்பேரரசு, சாதாவகனப்பேரரசு, குப்தப்பேரரசு ஆகியவற்றின் முக்கிய நகரமாகவும் மாளவம் என்னும் நாட்டின் தலைநகரமாகவும் இருந்தது. பாரதத்தின் ஐம்பத்தாறு தேசங்களில் மாளவமும் ஒன்று. Ujjain என்ற பெயரில் மத்தியப்பிரதேசத்தில் இந்த நகரம் இன்றும் இருக்கிறது.

                உஜ்ஜயினிக்கு இன்னும் சில சிறப்புகளும் உண்டு.

                அது காளிமாதாவின் இருப்பிடங்களில் ஒன்று. அங்குள்ள காளியை உச்சினி மாகாளி என்று தமிழில் சொல்லுவார்கள். மாந்திரீகத்தில் வழுத்தப்படும்/அழைக்கப்படும் முக்கிய தேவியாக உச்சினி மாகாளி விளங்குகிறாள். உச்சினி மாகாளியின் அருளைப் பெற்றவர்களை வெல்லமுடியாது என்பது ஐதீகம்.

                விக்கிரமாதித்தனுக்குப் பல ஆற்றல்களைக் கொடுத்தவள்

                காளி மூர்த்தங்களில் ஆத்யகாளி, மகாகாளி, மகாகாளி தசமுகி போன்ற வடிவங்கள் இருக்கின்றன. பத்ரகாளி என்னும் காளி, மங்கலகரமான காளி; மங்கலத்தைச் செய்பவள். 'பத்ர' என்றாலே 'சாந்தம்', 'அமைதி', 'மங்கலம்' என்று பொருள்.
                தற்காலத்தில் 'பத்ரகாளி' என்னும் பெயருக்கு எதிர்மறையான அர்த்தம் ஏற்பட்டு விட்டது.
                பத்ரகாளிகளில் மிகவும் புராதனமாகவும் முக்கியமானமானவளாகவும் விளங்குபவள் உஜ்ஜைனி என்னும் நகரில் இருக்கும் உஜ்ஜைனி மாகாளி. தமிழில் உச்சினி மாகாளி என்று கூறுவார்கள்.
                கவிஞர்கள், புலவர்கள், உபாசகர்கள், ஆற்றல்மிக்கவர்கள், சக்கரவர்த்திகள், மந்திரவாதிகள் போன்றவர்கள் மிகவும் விரும்பிவழிபட்ட தெய்வம் உச்சினி மாகாளி. அவர்களுக்கு அவள் கவித்துவம், புலமை, ஏகச்சக்ராதிபத்தியம், மந்திர ஆற்றல் போன்றவற்றை அளித்திருக்கிறாள்.
                உஜ்ஜைனி தமிழகத்தின் நேர் வடக்கில் அமைந்துள்ள புராதன நகரம்.
                மிகவும் புகழ் வாய்ந்தது.
                இந்திய வான சாஸ்திரத்தில் அந்த நகரத்தையே பூமியின் நடுவாகவும் பரதகண்டத்தின் நடுவாகவும் வைத்து பண்டைகாலத்தில் வகுத்திருந்தார்கள். அதன் அட்சரேகை, தீர்க்க ரேகைகளை வைத்தே இன்றும் பல பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகின்றன.
                அந்த நகரத்தின் இன்னொரு பதிப்பாக தமிழகத்தில் உஞ்சேனை மாகாளம் என்றொரு ஊரை ஏற்படுத்தினார்கள். அங்கு மகாகாளேசுவரர், மகாகாளி ஆகியோர் முக்கிய தெய்வங்கள்.
                இது தேவாரப் பாடல் பெற்ற பழம்பெறும் தலம்.


                உச்சினி மாகாளி என்னும் காளியை வடபத்ரகாளி என்று குறிப்பிடுவதுண்டு.
                தமிழில் சகர யகரப் போலி போன்று பகர வகரப் போலி இருக்கிறது. 'வ' என்பது 'ப'வாகவும், 'வ' என்பது 'ப'வாகவும் மாறும்.
                வட பத்ரகாளி என்னும் பெயர் படபத்ரகாளியாக உச்சரிக்கப்படுகிறது. வடபத்ரகாளி என்னும் பெயரில் தமிழர்கள் பல இடங்களில் அவளை வழிபட்டுவருகின்றனர்.
    
                உஜ்ஜைனி மாகாளி என்னும் மாகாளி வழிபாடு மிகவும் புராதனமானது.  
 
    
                அவன் தலை ஈட்டிமுனையில் படும்போது மாகாளி தோன்றினாள்.
                ஒரு பேரரசைத் தோற்றுவிப்பதற்குக் காளி வரம் தந்தாள்.
                அவளுடைய அருட்சக்தியால் அங்கு ஒரு மாபெரும் நகரும் ஏற்பட்டது.
                அந்த நகரத்தின்கண் மாகாளியும் கோயில் கொண்டாள்.
                அவ்வாறு ஏற்படுத்தபட்ட நகரத்திற்கு 'உஜ்ஜைனி' என்று பெயரிட்டனர்.
                வரம் தந்த மாகாளிக்கும் 'உஜ்ஜைனி மாகாளி' என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது.
                உஜ்ஜையினிலிருந்துகொண்டு சிறப்பாக ஆட்சிபுரிந்தான். மற்ர நாடுகளைக் கைப்பற்றி ஏகச்சக்ராதிபதியாக விளங்கினான். நீதியிலும் சிறந்துவிளங்கினான்.
                இந்திரலோகத்துக்கு இந்திரனால் அழைக்கப்பட்டு,  மற்றவர்களால் தீர்ப்பே சொல்லமுடியாத போட்டி ஒன்றுக்கு மிகவும் திறமையாக தீர்ப்புசொன்னதால் ஆயிரம் ஆண்டுகள் வீற்றிருந்து ஆளக்கூடிய சிம்மாசனம் ஒன்றை இந்திரன் அவனுக்கு அளித்தான்.
                உஜ்ஜைனிக்குத் திரும்பியதும் பட்டி நடந்த விபரங்களை அறிந்தான். தானும் ஆயிரம் ஆண்டுகள் விக்கிரமாதித்தனுக்கு மந்திரியாக இருக்கவேண்டுமென்று விர்ம்பி, உஜ்ஜைனி மாகாளியிடம் சென்று தியானத்தில் இருந்தான். அவனுக்கு முன்னால் தோன்றிய மாகாளி, சக்கரவர்த்தி ஒருவனைப் பலிகொடுத்தால் ஈராயிரம் ஆண்டுகள் ஆயுள் தருவதாகச் சொன்னாள்.
                பட்டி திரும்பிப்போய் தம் அரசனிடம் சொன்னான். விக்கிரமாதித்தன் தன் தலையைத் தந்தான். காளிக்கு அவனை பலை கொடுக்கவும் உஜ்ஜனி மாகாளி பட்டிக்கு தரிசனம் கொடுத்து ஈராயிரம் ஆண்டுகள் ஆயுளைத் தந்தாள்.
                அதைக் கேட்டு பட்டி ஒருமாதிரியாகச் சிரித்தான்.
                மாகாளியைக் கேட்டான்,
                "இந்த வரம் வேலை செய்யுமா?"
                "அதிலென்ன சந்தேகம்?"
                "சிலநாட்களுக்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோக சிம்மாசனத்தில் இருந்துகொண்டு ஆளும் வரத்தைப் பெற்றார், மாமன்னர் விக்கிரமாதித்தார். ஆனால் இதோ அவருடைய தலை. இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் கொடுத்த வரமே இப்படி ஆகிவிட்டதே? இந்த நிலையில் உன்னுடைய வரத்தை நினைத்துச் சிரித்தேன்", என்றான்.
                பட்டியின் சாதுர்யத்தால் காளிக்குச் சந்தோஷம். பெரிதாகச் சிரித்துவிட்டு விக்கிரமாதித்தனுக்கு உயிர் கொடுத்து எழுப்பிவிட்டாள்.
                விக்கிரமாதித்தன் இந்திர லோக சிம்மாசனத்தில் பட்டியின் யோசனைப்படி காடாறு மாதம் நாடாறு மாதம் என்று ஆட்சி செய்து இருவருமாக ஈராயிரம் ஆண்டுகள் சிறப்புடன் வாழ்ந்தனர்.

                காளிதாசனுக்கு கவித்துவத்தைக் கொடுத்தவள் வடபத்ரகாளிதான்.
    
                காளிதாசன் எழுதப் படிக்கத்தெரியாத ஆட்டிடையன். அவன் மிகவும் மேதையாக விளங்கிய ஓர் இளவரசியை மணந்தான். படிப்பறிவு இல்லாத மூடன் என்று தெரிந்ததும் எப்படியாவது காளியை வழிபட்டு கல்வியறிவு பெற்றுவருமாறு அவனை அனுப்பிவிட்டாள். அவனும் உச்சினி மாகாளியை அண்டி வேண்டிக்கொண்டதற்கிணங்க அவனுக்கு அவள் சியாமளாவாகவும் ராஜராஜேஸ்வரியாகவும் காட்சியளித்து அவனுக்கு ஈடுஇணையற்ற கவித்துவத்தை அளித்தாள். அதனை காளிதாசனுடைய சியாமளா தண்டகத்திலிருந்து அறியலாம்.

                அதுபோலவே ஒட்டக்கூத்தர் தம்முடைய சிறந்த நூலாகிய தக்கயாகப் பரணியை எழுதுவதற்கு வெளிச்சம் காட்டுவதற்காகப் பந்தம் பிடித்தவள் திருவொற்றியூர் காளி.

                காளியின் தோற்றத்தைக் கண்டு பயப்படாமல் காளியை மங்கலசொரூபினியாகவும் சாந்தையாகவும் வழிபடுவதே நல்லது. அதுதான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகாநந்தர் ஆகியோர் கண்ட வழிபாடு. பத்ரகாளி என்றாலே 'மங்கலகரமான சாந்தமான காளி' என்றுதான் அர்த்தம்.

சகலகலாவல்லி மாலை....



சகலகலாவல்லி
அம்சத்தில்
தமிழ்த் தாய்


                    தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணங்கிவரும் தெய்வங்களில் நாமகள், கலைமகளாகிய சரஸ்வதியும் விளங்குகின்றாள்.

                    சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை மன்னர்களைவிட புலவர்களின் செல்வாக்கே ஓங்கியிருந்த்தது. சென்றநூற்றாண்டுவரையிலும்கூட அவர்களுக்கு செல்வாக்கு இல்லாவிடினும் கெளரவமாவது இருந்தது. தற்காலத்தில்தான் கற்றவர்களுக்குத் தமிழர்களிடையே மதிப்பு சா¢ந்துவிட்டது.

                    புலவர்களின் செல்வாக்காலும், கல்வியின் முக்கியத்துவத்தாலுமே நாமகளின் வழிபாடு சிறந்து விளங்கி பரவியது. வேறு தெய்வங்களை முழுமுதற்பொருளாக வணங்கி வந்த பெரும்புலவர்களும் கூட நாமகளைத்துதிக்கத் தவறவில்லை.

                    பெரும் விஷ்ணு பக்தராகிய கம்பரும், தீவிர சிவபக்தராகிய ஒட்டக்கூத்தரும் நாமகளை முழுமையாகப் பெற்றவர்கள். அடிக்கடி கலைமகளை நேரடியாகப் பார்க்கும் பேறு அவர்களுக்குக் கிட்டியது. ஆதி சங்கரா¢ன் பேராற்றலை மூன்றுமுறை கலைமகளே நோ¢ல் வந்து பா¢சோதித்திருக்கிறாள். அவரும் சர்வக்ஞபீடம் ஏறமுடிந்தது.

                    கலைமகளின் துதிகள் ஏராளமாகத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன. சமண காப்பியமாகிய சீவகசிந்தாமணியில்கூட "நாமகள் இலம்பகம்" என்றொரு அத்தியாயம்  உள்ளது.

                    கம்பா¢ன் "சரஸ்வதி அந்தாதி"யும், ஒட்டக்கூத்தா¢ன் "ஈட்டி எழுபது"ம் குமரகுருபரா¢ன் "சகல கலாவல்லி மாலை"யும் மிகவும் ஆற்றல் வாய்ந்த துதிமாலைகள்.

                    நாமகளின் பேரருளுக்குப் பொ¢தும் பாத்திரமானவர் குமரகுருபரர்.

                    பிறந்ததிலிருந்து பேசாமலேயே இருந்தவர் அவர். சிறு வயதில் அவருடைய பெற்றோர் அவரைத் திருச்செந்தூர் முருகனின் சன்னிதானத்தில் விட்டுவிட்டுச் சென்றனர்.

                    முருகனின் திருவருளால் அவர் கவிமா¡¢யாகப் பொழிந்தார். முதற்பாட்டு முருகனின்
போ¢ல் பாடிய "கந்தர் கலிவெண்பா".
                    அன்றிலிருந்துதான் அவருக்குக் "குமரகுருபரன்" என்னும் பெயர் நன்கு விளங்கலாயிற்று.
திருச்செந்தூ¡¢லிருந்து மதுரைக்கு வந்தார். அங்கு அவர் மீனாட்சியின் சன்னிதியில் "மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ்" பாடினார்.
                    அதை மன்னர் திருமலை நாயக்கா¢ன் மடிமீது சிறு குழந்தை வடிவிலிருந்து அங்கயற்கண்ணி கேட்டுக்கொண்டிருந்தாள்.
                    அதில் "தொடுக்கும் பழம்பாடல் தொடையின் பயனே" என்னும் பாடலின்போது திருமலை
நாயக்கா¢ன் கழுத்தில் கிடந்த முத்துமாலையைக் கழற்றி, மீனாட்சி, குருபரனின் கழுத்தில் சூட்டினாள்.
                    பிறமதவாதிகளுடன் வாதிட்டு வெல்வதற்காக குருபரர் தமிழ்நாட்டிலும் அதன்பிறகு பாரதநாட்டின் இதரபகுதிகளிலும் திக்குவிஜயம் செய்தார்.
                    அப்போது காசிக்கும் சென்றார். சைவர்களின் முக்கிய தலமாகிய காசியில் தமிழர்களுக்கு என்று ஒன்றுமேஇல்லையே என்ற ஆதங்கம் அவருக்கு ஏற்பட்டது.
                    ஆகவே காசியில் ஒரு மடத்தைத் தோற்றுவிக்க நிச்சயித்தார்.
                    அவ்வமயம் இந்துஸ்தானத்தின் பேரரசராக ஷா ஜஹான் இருந்தார். அவருடைய பிரதிநிதியாக அவருடைய மூத்தமகனாகிய தாரா ஷிக்கோ நவாப் பதவியில் அவுத் என்னும்
ஊ¡¢ல் இருந்து வந்தார். அவரைக் காணச் சென்றார் குருபரர்.

                    சித்தராகிய குருபரர் போகும்போதே சிங்கமொன்றின் மீது சவா¡¢ செய்து சென்றார்.
                    நவாபு இந்துஸ்தானி மொழியில் பேசினார். ஆனால் அம்மொழி குருபரருக்குத்
தொ¢யாது.

                    ஆகவே சரஸ்வதியைத் தியானித்து "சகல கலாவல்லி மாலை" எனும் பாடலைப்
பாடினார். நாமகளுடைய அருளால் குருபரருக்கு இந்துஸ்தானியில் பேசும் ஆற்றல் ஏற்பட்டது.
                    இவ்வகை சித்தியை "Gift of Tongues" என்று கூறுவார்கள். இக்காலத்தில் கூட
சில கிருஸ்தவ சமயபோதனையாளர்களுக்கு இறையருளால் வேற்றுமொழியறிவு ஏற்படும்.
மற்ற சமயங்களில் சாதாரணமாகத்தானிருப்பார்கள். நவாபிடம் இந்துஸ்தானியில் சரளமாக
உரையாடித் தம் வேண்டுகோளைச்  சமர்ப்பித்தார்.

                    மனமகிழ்வுற்ற நவாபு காசியில் மடம் கட்டிக்கொள்ள இனாமாக நிலம் ழங்கினார். அன்றிலிருந்து குமரகுருபரா¢ன் மடத்தைக் "காசிமடம்" என்றும், அவருடைய வழியில் வந்த மடாதிபதிகளைக் "காசிவாசி" என்றும் அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
                    எளிமையாகக் கலைமகளை வழிபடுவது எப்படி?
                    சில புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சிக்கலான பூஜை முறைகளும் சமஸ்கிருதமந்திரங்களும் தோத்திரங்களும்தான் இருக்கின்றன.
                    ஆள்வைத்துச் செய்வது என்பது சிரமம் அல்லவா?

                    ஆகவே,
   
                    சரஸ்வதி படத்தை வைத்துக்கொண்டு அதன் அருகே விளக்கேற்றிவைத்து, முன்னால்
ஒரு வெண்ணிறத் துணியை வி¡¢த்து, அதன்மீது புத்தகங்கள், எழுதுகருவிகள், மற்றபடிக்கு ஸ்டெதாஸ்கோப்பு போன்ற தொழிலுக்கு¡¢ய சாதனங்கள், ஆகியவற்றை வைக்கவேண்டும். ஏதாவது பலகாரங்கள், சுண்டல் போன்றவை யதேஷ்டம். ஊதுபத்தி. சாம்பிராணி. மலர்கள்.
கற்பூற தீபம். வெற்றிலைபாக்கு, மஞ்சள், குங்குமம், விபூதி என்று கிடைப்பதை வைக்கலாம். கிடைத்தால் சா¢. ஓஸ்லோ போன்ற இடங்களில் இதற்கெல்லாம் எங்கு போவதாம்?


                    கணினி, பொ¢ய கருவிகள், வாகனங்கள் போன்றவற்றை ஆங்காங்கு விட்டுவைக்கலாம்.

                    முக்கியமாக "சகல கலா வல்லி மாலை"யைப் படித்துப் பூஜை செய்யலாம்.

                    அதற்குமுன் புத்தகபீடத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்யவேண்டும்.

                    என்னமோ, ஏதோ என்று பயந்துவிடக்கூடாது. ஒன்றுமில்லை. முழுமனத்துடன் கலைமகளை நினைத்து அந்த பீடத்தில் இருப்பதாக வேண்டிக்கொள்ளவதுதான் அது. தமிழிலோ தெலுங்கிலோ எம்மொழியிலும் நினைக்கலாம். சரஸ்வதிக்கு இந்த மொழிகளெல்லாம் நிச்சயம் தொ¢யும்.

                    சகலகலாவல்லிமாலையைச் சொல்லமுடியாவிட்டலும் கவலையுறவேண்டாம்.

                    நாமகளை மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் போதும்.

                    பணத்தைக் கொட்டிப் படாடோபமாக நீட்டி முழக்கிச்செய்யும் பூஜைகளினால்தான் அம்பிகை மனமகிழ்வாள் என்ற எண்ணம் எப்படியோ ஆழமாக வேரூன்றிவிட்டது.    தனக்கே சா¢யாகத் தொ¢யாமல் வாய்க்கு வந்ததைச் சொல்லிக்கொண்டு, ஆயிரக்கணக்கில் செலவழித்து, பட்டுப்புடவைகளை நெய்யில் முக்கியெடுத்து நெருப்பில் போட்டு எ¡¢ப்பதால் அம்பாள் ஏமாந்துவிடுவாளா, என்ன?

                    அவளுக்கு வேண்டியது ஆழமான, எளிமையான பக்தி.

                    அவ்வளவே!

வலம்புரி சங்கு...

                                                                     PART - 1
                                                       வலம்புரி சங்கு
                                                      சங்கநிதி பதுமநிதி



சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தைத் தாங்கியிருப்பது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் ங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப் படுகிறது. எந்த இனத்து சங்காக இருந்தாலும் அவற்றிலிரு வகைகள் உண்டு. இடம்புரி வலம்புரி என்று அவற்றைக ்கூறுவார்கள்.
                        சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக ஓடும். அந்த மாதிரியான அபூர்வமான சங்குகளை
வலம்புரிச் சங்கு என்பார்கள்.


வலம்புரி                                                இடம்புரி

                        இடம்புரியை 'வாமாவர்த்தம்' என்றும் வலம்புரியை 'தக்ஷ¢ணாவர்த்தம'் என்றும் சொல்வார்கள்.
                        வலம்புரியா, இடம்புரியா என்று எப்படி நிர்ணயிப்பது?                   
சங்கின் நுனி மேல்புறமாக நோக்கியிருக்குமாறு வைத்திருக்கவேண்டும். கைகளை முஷ்டி பிடிக்கவேண்டும். ஆள்காட்டிவிரல், நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகியவை உள்ளங்கைக்குள் அடங்கியிருக்குமாறு மடக்கிவைக்கப்பட்டிருக்கவேண்டும். பெருவிரல் மேல்நோக்கி நீட்டப்பட்டிருக்கவேண்டும். சங்கின் உட்புறச் சுழற்சி எந்தக் கையின் விரல்களின் உட்புறச்சுழற்சியோடு ஒத்து இருக்கிறதோ, அந்தக் கையை ஒத்த சங்கு அது. வலக்கையுடன் ஒத்திருந்தால் அது வலம்புரி.

 


வலம்புரிச் சுற்று

                       
                        இந்த இடத்தில் உயிரியல் நூலைக் கொஞ்சம் தொட்டுப் பார்ப்போமே? இயற்கையின் பல விதிகளில் Mutation என்பதும் ஒன்று. சாதாரணமாக எந்த உயிரினத்திலும் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் அவற்றின் பாரம்பரிய குணாதி
யங்களைப் பொறுத்தே அமையும்.ஆதியில் மூதாதையரிடமிருந்து வந்த ஜீன்களின்மூலம் கிடைக்கப் பெற்ற குணாதிசயங்கள்தாம் அந்த வம்சத்தில் வந்த வாரிசுகளிடையே தோன்றும்.இந்தப் பொது விதி பல சமயங்களில் பிறழ்ந்துவிடும். அதுவரைக்கும் அந்த குறிப்பிட்ட வம்சாவளியிடம் காணப்படாத முற்றிலும் புதிய குணாதியம் திடீரென்று தோன்றிவிடும். இத்தகைய மாறுதலைக் கொடுக்கும் புதிய ஜீன் தோன்றியதாலேயே இவ்வாறு ஏற்படும்.
                        இந்த மாதிரி பிறழ்ச்சியின் மூலம் ஏற்படும் குணாதிசயங்கள்கொண்ட ஜீவராசி தோன்றுவதை Mutation என்றும் அந்த ஜீவராசியை Mutant என்றும் குறிப்பிடுவார்கள்.
                        அணுசக்தியின் வெளிப்பாட்டின்போது ஏற்படும் கதிர்வீச்சால் மியூட்டேஷன் ஏற்படும். சூரியனின் கதிர்களிலும்கூட இந்த மாதிரியான ஆற்றல் உண்டு.
                        பல்லாயிரக்கணக்கான இடம்புரிச்சங்குகளில் ஒரே ஒரு வலம்புரிச்சங்கு தோன்றுவது மியூட்டேஷன ்மூலமாகத்தான்.
                        ஆகவே வலம்புரிச ்சங்கு எனப்படுவது ஒரு மியூட்டண்ட் ஸ்ட்ரேய்ன் எனப்படும் ஜீவராசி. அது தனிப்பட்ட இனமில்லை.
                        வலம்புரிச் சங்குகள் இயற்கையில் அதிகம் காணப்படமாட்டா. அதிலும் வெண்சங்கு எனப்படும் பால்சங்கில் வலம்புரி ஏற்படுவது மிக அபூர்வமானது. அதுவும் பெரியதாக இருப்பது இன்னும் அபூர்வம்.  ("ஆனாலும்கூட தற்காலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளிலும் கோயில்களிலும் வலம்புரிச சங்குகள் வாங்கி வைத்திருக்கிறார்களே. கலைப்பொருள்கள் விற்குமிடங்களிலும் பூசைக்குரிய சாமான்கள் விற்கும் ஒவ்வொரு கடையிலும்  நூற்றுக்கணக்கில் வலம்புரிச்சங்கு வைத்திருக்கிறார்களே?" என்ற கேள்வி எழலாம். அதெல்லாம் பிறந்த இடத்தின் மகிமையைப் பொறுத்தது. வலம்புரிச் சங்கின் பிறப்பிடம் கடல். ஏதோ ஒருவகை (இ)-மி(யூ)ட்டேஷனால் அது பிலாஸ்ட்டிக் தொழிற்சாலைகளிலும் தற்காலத்தில் பிறக்கிறது.)
                        பால்கடலிலிருந்து லட்சுமியுடன் சங்கும் தோன்றியது. ஆகையால்தான் சங்கை அவ்வளவு விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். 'வலம்புரிச் சஙெடுத்துப் பாலூட்டுதல'் என்பது செல்ச்சிறப்பைக் காட்டுவது.
                        வலம்புரிச ்சங்குகளில் தலைமையானது விஷ்ணுவின் ் கரத்தில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு. அதை அவர் சிவபெருமானிடமிருந்து திருவலம்புரி என்னும் திருத்தலத்தில் பெற்றாராம்.
                        செல்வத்திற்கு அதிபதியாக விளங்கும் குபேரனிடம் நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் உண்டு. அவற்றை வண்டோகை, மனோகை, பிங்களிகை, பதுமை, சங்கை, வேசங்கை,காளை, மகாகாளை, சர்வரத்னம் என்று தமிழ் நூல்கள ்குறிப்பிடுகின்றன.
                        அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை சங்கநிதி பதுமநிதி என்னும் என்னும் பெருநிதிகள். பல கோடிக்கணக்கான பொன் மதிப்புப்பெற்றவை.
   
    சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
        தரணியோடு வானாளத் தருவரேனும்
    மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
        மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லராகில்
    அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்
        ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
    கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
        அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே.

                        இந்தப் பாடல் திருநாவுக்கரசர் பாடியது.  'சங்கநிதி பதுமநிதியும் தந்து, நிலம் மட்டுமின்றி வான் முழுவதையும் ஆட்சி புரியத் தந்தாலும் அந்த தந்தவர்கள் 'சிவனை ஒரே தேவன;் முடிவான தேவன்' என்ற கொள்கையில் இல்லாதவராக இருந்தால், மங்குபவர்களாகிய அவர்கள் கொடுக்கும் அந்த செல்வங்களை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அங்கமெல்லாம் குறைந்து அழுகிய நிலையில், முற்றிய தொழுநோயால் பீடிக்கப்பட்டவராகவும், மாட்டை உரித்து உண்டு உழலும் புலையராக இருந்தாலும்கூட, அவர்கள் கங்கையை அணிந்த எம்பிரானார்க்கு அன்பராக இருந்தால் அவர்களே நாம் வணங்கும் கடவுளர'்.

                        இடம்புரி வலம்புரி தன்மைகளை நாம் இயற்கையில் பல பொருட்களில் பார்க்கலாம்.
மலர்களில் இந்த இருவித தன்மைகளும் உண்டு. அவற்றின் இதழ்களின் சுழற்சி இந்த விதமாக இருக்கும். இலைகள் விடுவதிலும் கிளைகள் விடுவதிலும்கூட இதைக் காணலாம்.
anpudan
k.senthil

Varadarajan Mudaliar.....Vardhabhai !! ..

 

Varadarajan Muniswami Mudaliar, also known as Vardhabhai (1926–1988) was a Tamil immigrant from Tuticorin, Tamil Nadu, who rose to be a mafia don in Bombay, India. Most active in the 1970s, he was the link in the underworld history between old time mafia men such as Haji Mastan.

Varadarajan started as a porter in Bombay's Victoria Terminus Station in the 1960s. His emergence in the underworld was largely through bootlegging and matka operations. Later, he diversified into contract killings, smuggling and dock thefts. He ruled the underworld well in to the 1980s. In the 1980s, he almost ran a parallel judiciary system, dispensing justice within his community. Varadarajan Mudaliar came into light after the reign of Karim Lala. At that time, Karim Lala, Varadarajan and Haji Mastan were the trio that ruled the Bombay underworld.

Varadarajan was very active in the Matunga and Dharavi areas of Mumbai. He organized the annual Ganesha festival in Matunga. However, after the collapse of the cotton mills in Bombay in the mid 1980s, their relevance ended.

In the mid 1980s, police officer Y C Pawar targeted Varadarajan. By the end of the 1980s, most of Varadarajan's gang members had been imprisoned or eliminated by Pawar, and Varadarajan himself had to fled to Chennai. Varadarajan died in Chennai in 1988, aged 62.

It is said that these three had good standings with their communities and looked after their interests.

அருணகிரிநாதரின்வேல்வகுப்பு...

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் தவிர வேறு சில நூல்களும் இருக்கின்றன. கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம்,  இருபத்தேழு திருவகுப்பு பாடல்கள் ஆகியவை.
                    திருவகுப்பு பாடல்களுக்கு பிரயோக முறையன்றுண்டு. அதாவது இன்னின்ன காரணங்களுக்காக, வேண்டுகோளுக்காக பாராயணம் செய்வது என்ற மரபு உண்டு.
                    நாளை தைப்பூசத்திருநாள்.  தைப்பூசத்தன்று முருகன் சக்தியிடம் சக்திவேல் பெற்றதாக  கௌமார சமயத்தினர் அதனைச் சிறப்பித்துக் கொண்டாடுவார்கள்.
                    அதை முன்னிட்டு வேலைச் சிறப்பித்து பாடப்பட்ட திருவகுப்புகளில் ஒன்றான 'வேல் வகுப்பு' என்னும் பாடல் இங்கு அனுப்பப்படுகிறது. ஆபத்துக்கள் யாவும் அகன்றுபோக இதனை  படிப்பார்கள்.
   

வேல்வகுப்பு


பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇஇதழ் மறச்சிறுமி
        விழிக்குநிக ராகும்

       பனைக்கைமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
        தெறிக்கவர மாகும்

       பழுத்தமுது தமிழ்ப்பலகை இஇருக்குமொரு
    கவிப்புலவன் இஇசைக்குருகி வரைக்குகையை
        இஇடித்துவழி காணும்

       பசித்(து)அலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்(து)அவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
        புசிக்கஅருள் நேரும்

சுரர்க்குமுனி வரர்க்குமக பதிக்கும்விதி
          தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
        இஇடுக்கண்வினை சாடும்

       சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
    ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
        ஒளிப்பிரபை வீசும்

      துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கவிடர்
    நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
        எனக்கொர்துணை ஆகும்

     சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கியெழு
        மறத்தை நிலை காணும்!

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
     தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇஇறை
        கழற்குநிகர் ஆகும்

     தலத்திலுள கணத்தொகுதி களிப்பின்உண
    வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
        விதிக்கவளை வாகும்

     தனித்துவழி நடக்குமென(து) இஇடத்துமொரு
    வலத்தும்இஇரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இஇரவு
        பகல்துணைய தாகும்

    சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில்
        விருப்பமொடு சூடும்;

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
        நிறைத்துவிளை யாடும்

    திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
        விசைத்ததிர ஓடும்

    சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
        விழித்தலற மோதும்

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தன்என துளத்திலுறை கருத்தன்மயில்
        நடத்துகுகன் வேலே.        


                                                                                                                     



அன்புடன்
       செந்தில்



எனது நண்பனே......

நீ எனக்கு இருக்கும்
தைரியத்தில் தான் நண்பா,
என் வேண்டுதல்கள்
தேவைகள் எதிர்பார்ப்புகள்
எதையும் கடவுள்
கண்டுகொள்வதேயில்லை...!!!


மந்திரத்தின் பலன்-(அமிர்தானந்தமயி)

ஒருவர் தனது கையில் கிடைத்த மாத்திரையை தூக்கமாத்திரை
என தெரியாமல் விழுங்கி வைக்கிறார். அடித்துப்போட்டாற்போல்
தூங்கிவிடுகிறார். மந்திரத்தின் அர்த்தத்தை அறியாமல்
நீங்கள் உச்சரித்தாலும், அதற்குரிய பலன் இருக்கவே
செய்யும். மந்திரத்தை சிரத்தையோடும், அன்போடும் உச்சரிக்க
வேண்டும். தீவிர கவனம் இருப்பதும் அவசியம்.
நீங்கள் ரயிலிலோ, பஸ்சிலோ பயணம் செய்கிறீர்கள். வண்டியை
யார் ஓட்டிச்செல்கிறார் என்று தெரியாவிட்டாலும்,
சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்துவிடுகிறீர்கள். ரயில்
கட்டும் தொழிற்சாலை எங்கிருக்கிறது, பஸ்சுக்கான
உதிரிபாகங்கள் எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு
தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் இறங்கிச்செல்லும்
ரயில்நிலையம் அல்லது பஸ் நிலையத்திலிருந்து சிறிது
தொலைவில் உங்கள் வீடு இருக்கிறது. மந்திரம் உண்மையை
அறியும் முயற்சியில் உங்களை இட்டுச்செல்லும். அங்கிருந்து
முடிவான குறிக்கோளை நீங்கள் அடைவது எளிது.

தயிரை உற்பத்தி செய்ய இயற்கையில் ஒரு வழி இருக்கிறது.
புளிப்பான ஒரு பொருளை பாலில் சேர்த்தால் போதும். 24 மணி
நேரத்தில் பால் சுத்த தயிராகிவிடும். சீடனுக்கு உபதேசம்
செய்விக்கிறபோது, குருவானவர் அவனுள் உறங்கிக்கிடக்கும்
ஆற்றலை எழுப்பிவிடுகிறார். அதற்கு தன்னுடைய ஆற்றலில்
சிறிதளவே அவனுக்கு வழங்குகிறார். உறைமோரைப் போல அவர்
செயல்படுகிறார். ஒரு செடியைப் பிடுங்கி இன்னொரு இடத்தில்
நடுவதுபோல, அவர் இகலோக சுகத்தில் திளைக்கிற மனதைப் பறித்து
ஆன்மிக உலகில் இடம்பெறச் செய்கிறார்.


அருணகிரியார் வரலாறு: ஒரு மீள்பார்வை

ருணகிரிநாதர் என்றாலேயே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும். அவற்றின் வழியாகப் பிரவாகிக்கும் திருமுருகன் திருவருள் கருத்தை நிறைவிக்கும். இத்தகு அருளாளரின் வரலாறு மட்டும் மிகவும் குழப்பமானதாயும், தெளிவற்றதாயும் இருக்கிறது. இதை விட அவலம் யாதென்றால் தேவையற்றதும் வீணானதுமான இந்து தத்துவார்த்தங்களுக்கு முரணான அபவாதங்களும் அருணகிரியாரின் பெயரில் திணிக்கப் பட்டிருக்கிறமையையும் பார்க்கிறோம்.
அருணகிரிநாதரின் காலமாக எதனைத் தீர்மானிக்கலாம் என்பது குறித்தும் பல்வேறு அறிஞர்களிடையே கருத்துப் பேதமுண்டு. ஆனால் திருப்புகழில் கந்தபுராண அரங்கேற்றம் பற்றிய செய்தி இருக்கிறது.
முற்பட்ட இலக்கண நூலிடை,
தப்புற்ற கவிக்கெனவே அவை,
முற்பட்டு புதுத்துறை மாறிய புலவோனே

arunagiri_nathar_stampஇதன் மூலம் அருணகிரியார் கந்தபுராணம் அருளிய கச்சியப்ப சிவாச்சார்யாருக்கு பின் வந்தவர் என்று கருதலாம். அது போலவே, அருணகிரியார் காளமேகப்புலவரையும் ஓரிரு திருப்புகழ்களில் சிறப்பித்திருப்பதால் அவருக்கு பின் வந்தவர் அல்லது அவர் காலத்தவராயிருக்க வேண்டும். ஆனாலும் இவைகளை விடச் சிறப்பாக, 15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவனான பிரபுடதேவ மகாராஜனைப் பற்றி இவர் பேசுவதால் அவன் காலத்தவர் என்று கருதலாம்.
‘அதல சேதனாராட’ என்ற திருப்புகழில் அருணகிரிநாதர் ‘உதய தாம மார்பான பிரபுடதேவமாராஜன் உளமுமாட வாழ்தேவர் பெருமாளே’ என்று அது அமைந்திருக்கிறது. ஆக, அருணகிரியார் காலம் 15ம் நூற்றாண்டிற்குரியது. அவர் காலத்தில் இலங்கையில் முருக வழிபாடு சிறப்புற்றிருந்திருக்கிறது. அவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் முதலிய தலங்களைப் பாடியிருப்பதால் இது புலனாகும். ஆகவே அவர் போர்த்துக்கீசியர் இந்தியா- இலங்கையில் தமது ஆட்சியை நிறுவ முன் பிறந்தவர் என்பதும் தெளிவு. ஆக, அவர் காலம் 15ம் நூற்றாண்டே.
அருணகிரிநாதருக்கு முற்பிறவி என்று கூட ஒரு கதை இருக்கிறது. அதுவும் பரவலாக வழங்கி வருகிறது. அது இவ்வாறு உள்ளது. அகத்திய மாமுனிவர் வளர்த்து வந்த நாய் ஒன்று தேவேந்திரனாக மாறியதாம். அது பிறகு அர்ஜூனனாகியதாம். பின்பு அதுவே கண்ணப்ப நாயனாராக பிறவி எடுத்ததாம். பிறகும் அது நக்கீரராயும் பிறவி எடுத்து கடைசியாக அருணகிரிநாதராயும் பிறந்ததாம். இந்தக் கதையை தண்டபாணி சுவாமிகள் என்கிற முருகபக்தர் தாம் இயற்றிய அருணகிரிநாதர் புராணத்திலும் எழுதியிருப்பதாகத் தெரிகிறது.
இது மிக முரணானது. மகாபாரதத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனால் கீதோபதேசம் அருளப்பட்டவனான பார்த்தனாகிய அர்ஜூனன் மீண்டும் பிறந்தான் என்று கருதுவது இந்து சமய நம்பிக்கைக்கே முரண். அது போல பெரிய புராணத்திலும் ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாச்சார்யராலும் இன்னும் மாணிக்கவாசகர் முதலிய அருளாளர்களாலும் முக்தி நிலை பெற்றவர் என்றே துணிந்து கூறப்பட்ட புனிதரான கண்ணப்பதேவர் மீண்டும் பிறந்தார் என்கிறதும் சைவ சித்தாந்த மரபிற்கும் அவர் தம் பெருமைக்கும் இழுக்காகும். நக்கீரர் என்பது பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அது இன்னும் பெருங்குழப்பங்களுக்கே வழி செய்யும்.
ஆக, இது போலவே அருணகிரிநாதருடைய வாழ்க்கை வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிற வேதனையான நிலையைக் காண்கிறோம். இது போலத்தான் பட்டினத்தார் என்ற துறவற சீலருக்கும் உருத்திரகணிகை ஒருவருக்கும் சிவாலயம் ஒன்றில் உண்டான (கள்ள) தொடர்பால் அருணகிரியார் பிறந்தார் என்றும் இப்புராணம் சொல்கிறது. இதுவும் மேற்படி தண்டபாணியடிகள் பெற்ற கனவில் சொல்லப்பட்ட செய்தி தானாம். இது எவ்வளவு கேவலம்? வீணே இருந்த பட்டினத்தடிகள் இங்கு கொண்டு வந்து சேர்த்த விபரீதத்தை என் சொல்ல..? அது போக.. அருணகிரிநாதர் காலம் என்ன? பட்டினத்தார் காலம் என்ன?
அருணகிரியாரும் தம் திருப்புகழ் ஒன்றில்
குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை,
குயில் போற் பிரசன்ன மொழியார்கள்,
குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்ததென்ன,
குரு வார்த்தை தன்னை உணராமல்…

என்று பாடுவதனூடாக அவர் நற்குடிப்பிறப்புடையார் என்றும் அறியலாம். ஆக, மேற்கூறிய செய்தி மிக மோசமான கட்டுக்கதை எனலாம். இதற்குப் பிறகு வருகிற பிரச்சினை அவர் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பது.. இது நமக்கு அவ்வளவு அவசியமல்ல. இறையுணர்வு பெற்ற அருளாளர்கள் எக்குலத்தில் பிறந்தாலும் அவர் தம் இறையுணர்வையே போற்றிட வேண்டும். ஆனால் அவர் பிராமணர் என்றோ அல்லது தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றோ கருதுவதற்கும் இடமில்லை.
எப்படியோ, அருணகிரிநாதர் நல்ல கட்டமைப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பது ஒன்றே நாம் கண்டு கொள்ளக்கூடியதாகும். இதை விட ஒரு சிலர் கன்னிகையான முத்தம்மை என்ற கன்னிகைக்கு இறையருளால் ஆண் தொடர்பின்றி (யேசு கிறிஸ்து போல ?!?) அருணகிரியார் பிறந்தார் என்றும் சொல்லுகிறார்கள். இதுவும் இங்கு ஏற்பதற்குரியதாகவில்லை.
arunagirinathar_21நாம் முன் சொன்ன அருணகிரிநாதர் புராணத்தில் அருணகிரிநாதரின் ஜன்மதினமாக புரட்டாதி உத்தரமும் தனுர் லக்னமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனிப் பூரணையையும் அருணகிரிநாதர் விழாவாக இலங்கையில் சில அன்பர்கள் கொண்டாடி வருகிறார்கள். உண்மை எதுவென்று தெளிய இயலாதிருக்கிறது. எது எவ்வாறாகிலும் தமிழ்ச் சந்தக் கவியாகிய அருணகிரிநாதருக்கு எல்லோரும் ஒன்றுபட்டு, ஒரு நாளில் முக்கியமாக முருக பக்தர்கள் பக்தி விழாவும் இசை ஆர்வலர்கள் தியாகராஜ சுவாமிகளுக்குச் செய்வது போல இசை விழாவும் எடுப்பது அவசியமாகும்.
இது போலவே. அருணமுனிவர் பற்றி இன்னும் பல செய்திகளும் வழங்கி வருகின்றன. அவர் தம் திருப்புகழில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துவதைக் கண்டு அவர் பிராமணர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இது சிறிதும் ஆதாரமற்றது. அவர் எங்கும் தான் அந்தண மரபினர் என்று சொன்னதாகவே தெரியவில்லை. அது தவிர, சிலர் சம்ஸ்கிருதத்தில் பாகவதசம்பு, சாளுவாப்யுதயம் முதலிய நூல்கள் எழுதிய சோணாத்ரிநாதரும் இவரும் ஒன்று என்று கூட மயங்குகிறார்கள். இது உண்மையில் தவறு என்று ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
எவ்வாறாகிலும் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அத்துடன் அவருக்கு திருவண்ணாமலையுடன் தன் வாழ்வில் நெருக்கமான தொடர்பு இருந்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட பெருமகனார் தம் திருப்புகழில் ஓரிடத்தில் கூட கிரிவலம் பேசாமையும் ஈண்டு சிந்திக்கத் தக்கது.
எவ்வாறானாலும் அருணகிரிநாதர் தமது இளமைப்பருவத்தில் கீழான நடத்தையில் ஈடுபட்டார் என்கிற கருத்தை ஏற்காமல் இருக்க இயலாது. இதைத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்ற பெருமக்களும் அங்கீகரித்திருப்பதால் அதை நாமும் ஏற்கலாம். முக்கியமாக, திருப்புகழ் பாடல்களில் பல்வேறு இடங்களிலும் பெண்கள் பற்றியும் பெண்களால் தாம் பட்ட அவலங்கள் பற்றியும் ஒழுக்கம் கெட்டவர்களாக ஆண்களை மயக்கும் பெண்களின் அவயவங்கள் மற்றும் அவர்களின் நடத்தைகள் பற்றியும் பலவாறாகப் பேசுவதால் அவர் பெண்கள் மீது தீராத காமம் கொண்டு அலைந்தார் என்று கருதுவது தவறில்லை என்றே தோன்றும். உதாரணமாக,
மானார் கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து
கைப்பொருளே இழந்து அயர்வாயே

இவ்வாறு ஏராளமான திருப்புகழ்களைப் பார்க்கலாம். அத்தோடு இவர் இக்காலத்தில் கடவுள் இல்லை என்று நாத்தீகம் பேசினார் என்பதையும், மது மாது மாமிசம் போன்ற தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொண்டார் என்றும் தெரிகிறது.
ஆனால், இவ்வாறான கேவலமான வாழ்வில் தனது பொருள், இளமை, அழகு, அறிவு எல்லாவற்றையும் பறி கொடுத்த நிலையில் வாழ்வில் விரக்தியுற்று தான் பிறந்து, வளர்ந்து வாழும் ஊராகிய திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார் என்பதையும் நம்புவதற்கு அகச்சான்றுகள் கிடைக்கின்றன. பாம்பன் சுவாமிகள் முதலிய எல்லா பெரியவர்களும் இதனை ஆமோதிப்பதாகவே தெரிகிறது.
lord_muruga_blessing_aurnagiri
அருணகிரிநாதர் திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டவர் என்றும் கூறுவர். இதற்கும் திருப்புகழ்களில் ஆதாரம் காட்டுவர். இதை நம்மால் ஏற்கவும் மறுக்கவும் முடியவில்லை. ஆனால் அருணை முனிவர் துறவியாகவே இருந்திருக்க வேண்டும் என்று கருதுவதற்கு இல்லை. அவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் போல, சேரமான் பெருமாள் போல, பெரியாழ்வார் போல, இன்னும் எத்தனையோ பெரியவர்கள் போல பிற்காலத்தில் சீரான- சிறந்த இல்லறம் பேணியிருக்கலாம்.
எனவே, தற்கொலைக்கு முயன்ற அருணகிரியை அருளாளனான முருகவேள் தன் திருக்கரத்தால் ஏந்தி காப்பாற்றினார். தமது திருக்கரத்தில் விளங்கும் ஞானவேலால் அவர் நாவில் எழுதி ஆசீர்வதித்தார். இந்நிகழ்வை ஏற்பதற்கும் முருகன் அருணகிரிக்கு உபதேசித்தார் என்பதற்கும் தக்க சான்றுகள் நிறையவே உண்டு.
அருணைநகர் மிசை கருணையோடருளிய மௌன வாசமும் இருபெரும் சரணமும் மறவேனே
என்றும் இன்னும் பிறவாயும் இவ்வாறு முருகன் அருளியதை அருணகிரியார் வியந்து பாடியிருக்கிறார். மேலும் கந்தரனுபூதியில்

‘சும்மா இருசொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே’

என்று பாடுவதனூடும், திருமுருகன் அருணகிரிக்கு ஜெபமாலை அருளியதாகவும் தெரிகிறது. அதை ‘செபமாலை தந்த சற்குருநாதா’ என்ற திருப்புகழ் வரி காட்டி நிற்கிறது. இது போல அருணகிரியாருக்கு வயலூரிலும் விராலிமலையிலும் அற்புத தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன.
இது போலவே சிதம்பரத்திலும் திருச்செந்தூரிலும் பெருமான் நிருத்த தரிசனம் காட்டியதாகவும் அருணகிரியார் பாடியிருக்கிறார்.
கொண்டநட னம்பதம் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே

வில்லிபுத்தூரர் என்பவருடன் அருணகிரி வாதம் செய்து வென்றார் என்றும் கூறுவர். இதன் பின் வில்லிபுத்தூரர் செய்த தவறை மன்னித்து அவருக்கு மேலான கருணை செய்தார் என்றும் வரலாறு உள்ளது. இதை வைத்தே ‘கருணைக்கு அருணகிரி’ என்ற பழமொழி உருவாகியிருக்கிறது. இது போலவே பிரபுடதேவராஜனுக்காக அருணகிரிநாதர் முருகதரிசனம் காட்டினார் என்கிற வரலாறும் உண்டு. இதற்கும் திருப்புகழ்களில் நிறைவான சான்றுகள் உள்ளன.
அது போலவே, இன்றைக்கு திருவண்ணாமலைக் கோயிலுக்குள் வாயிலை ஒட்டியே‘கம்பத்து இளையனார் சந்நதி’ என்ற அழகிய சிறிய முருகன் ஆலயத்தைப் பார்க்கலாம். இவ்விடத்திலேயே அருணகிரிநாதருடைய வேண்டு கோளின் படி பிரபுடதேவமாராசனுக்கு கந்தப்பெருமான் கம்பத்தில் (தூணில்) தோன்றி காட்சி கொடுத்ததாக ஐதீகம்.
அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்று
அதிர வீசி வாதாடும் விடையிலேறுவாராட
அறுகு பூத வேதாளம் அவையாட

மதுரவாணி தானாட மலரில் வேதனாராட
மருவு வானுளோராட மதியாட
வனசமாமியாராட நெடிய மாமனாராட
மயிலுமாடி நீயாடி வரவேணும்

கதைவிடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால் நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாக
கதறு காலிபோய் மீள விஜயனேறு தேர் மீது
கனக வேத கோடூதி அலை மோதும்

உததி மீதிலே சாயும் உலகமூடு சீபாத
உவணமூர்தி மாமாயன் மருகோனே
உதயதாம மார்பார்பி ரபுடதேவமாராஜன்
உளமுமாட வாழ்தேவர் பெருமாளே

என்பது அப்போது அவர் பாடிய அற்புதப் பாடல். இப்பாடலைப் போலவே அவர் அருளிய அனைத்துத் திருப்புகழ்களும் சந்தம் நிறைந்து சிந்தை கவரும் சுந்தர மந்திரப் பெட்டகங்களாக விளங்குகின்றன.
murugaஇனி அருணகிரியார் கிளியுருக் கொண்டு விண்ணுலகம் சென்று கற்பக மலர் கொண்டு வந்தார் என்றும் அதன் பின் அப்படியே கிளி வடிவாக திருத்தணிகைக்குச் சென்று முருகன் தோளில் அமர்ந்து ‘கந்தரனுபூதி’ பாடினார் என்றும் சொல்லப்படும் செய்திகளுக்கெல்லாம் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனாலும் கந்தரனுபூதி அவரது ஞானமுதிர்ச்சியில் பாடியது என்பது தெளிவாக அப்பாடல்களின் ஊடாகத் தெரிய வருகிறது.
அருணகிரியார் மிகுந்த தமிழ்ப் பற்றுடையவராயும் இருந்திருக்கிறார். அதற்கு அவர் ‘முந்து தமிழ் மாலை’ என்று சொல்வதே சான்று. எத்தனை மொழியிருப்பினும் அவற்றுள் முந்தி நிற்பதால் அருணகிரியார் தமிழுக்கு கொடுத்த சிறப்பு அடைமொழியோடு கூடிய பெயர் முந்து தமிழ். அருணகிரிநாதரது திருப்புகழ்களும் மற்றும் பிரபந்தங்களையும் ஆராய்ந்து கற்பது அவசியம். அவற்றில் அக்கால வழக்கங்கள் பலவும் கூட இடம்பெற்றிருக்கின்றன.
இராமாயணம் முழுவதையும் அருணகிரியார் திருப்புகழ்களில் பல இடங்களில் விரவிப் பாடியிருக்கிறார். கிருஷ்ண லீலைகளும் பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பற்றியும் பாடியிருக்கிறார். அருணகிரிநாதப் பெருமான் பாடிய பிரபந்தங்கள் யாவற்றையும் இக்கட்டுரையில் அலசின் கட்டுரை மிக விரியும். ஆக, அருணகிரிநாதப் பெருமானின் சிறப்புகள் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டுமாயில் அறிஞர்கள் இவ்வரலாற்றில் ஆங்காங்கே முளைத்து விட்ட களைகள் நீக்கி, உண்மையை உலகறியச் செய்ய வேண்டிய கடப்பாடுடையவர்களாகிறார்கள்.
எல்லாரும் ஞானத் தெளிஞரே கேளீர் சொல்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ- பொல்லாக்
கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன்
திருப்புகழைக் கேட்கும் செவி’

(ஒரு வெண்பா)