செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
-------சுவாமிஜி




புதன், 29 ஜூன், 2011

வேத மகிமை...





 வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்காகும். இவற்றில் ரிக் வேதம் மந்திர பாகமாகவும் சூக்தங்களாகவும் உள்ளது. யஜுர் வேதம் யாகங்களின் மந்திரமாகவும், சாமம் இசையோடு கூடியதாகவும், அதர்வணம் யந்திர தந்திர அடிப்படைகளை விளக்குவதாகவும் விளங்குகின்றன.

ரிக் வேதம்

ரிக் வேதம் 2 வகையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது 10 மண்டலங்களாகவும் 1017 சூக்தங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10467 ரிக்குகள் அடங்கியுள்ளன. இரண்டாவது வகையில் இவ்வேதம் 8 அஷ்டகங்களாகவும் அவை 8x8=64 அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இவை 85 அனுவாகங்களைக் கொண்டதாகும்.
இதற்குரிய உபநிஷதங்கள் சமிதை, ஐதரேயம், பவாவிருத்த-ப்ராம்மணோபநிஷதம், கௌஷீதகம் என்ற நான்காகும். க்ருஹ்யசூத்ரம், ஆஸ்வலாயன கல்ப சிரௌத சூத்ரம், சாங்கியாயன சிரௌதம் அரண்யகம், ஐதரேயரண்யகம் - இவைகளை உள்ளடக்கியது கௌஷீதகம்.

யஜுர் வேதம்

இந்த வேதம் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளது. இவ்வேதம் யாகாதிகளைப் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. ரிக் வேதத்தில் உள்ள அனேக ரிக்குகள் இதில் இடம் பெற்றுள்ளன. கிருஷ்ண யஜுர் வேதம் 7 காண்டங்களாகவும் 44 பிரச்சனங்களாகவும் 651 அனுவாகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2190 கண்டிகைகள் உள்ளன. யஜுர் வேத மொழிகளுக்குக் கண்டிகைகள் என்று பெயராகும். கிருஷ்ண யஜுரின் உபநிஷதங்களை தைத்ன்யம், மஹா நாராயணம், கடகம், ஸ்வேதாஸ்வதரம், மைத்ராயணம் என்றும் கூறுவர்.
 
சுக்ல யஜுர் வேதம்
 
இந்த வேதம் 40 அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 303 அனுவாகங்கள் உள்ளன. 1549 கண்டிகைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வேதத்திற்கு 17 சாகைகள் இருக்கின்றன, இவற்றில் மாத்யம்தினம், கண்வம் எனும் இரு சாகைகள் உள்ளன. இதன் உபநிஷதம் பிரகதாரண்யமாகும். சுக்ல யஜுர் வேத சூத்ரம் (தெரியவில்லை) ப்ரமாண நூல் சதபதப்ரமாணமாகும்.
 
சாமவேதம்
 
இசை வடிவமாக விளங்கும் சாமவேதத்தின் வேதமொழிகளுக்கு கானங்கள் என்பது பெயர். பத்து கானங்களைக் கொண்ட தொகுதிகள் தசதிகள் எனப்பட்டன. தசதிகள் கூட்டமைப்பு அத்தியாயங்கள் என்றும் அத்யாயங்களின் கூட்டமைப்பு ஆர்ச்சிகம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த வேதம் இரண்டு ஆர்ச்சிகங்களாகவும் 30 அத்யாயங்களாகவும் 458 தசதிகளாகவும் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 1549 கானங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வேதத்திற்கு 1000 சாகைகள் இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளவை கௌதம சாகை, ராணாய சாகை, ஜைமினீய சாகை என்ற மூன்றாகும்.
இந்த வேதத்தின் பிரமாணங்கள் பஞ்ச விம்சம், சப்த விம்சம், சாம விம்சம், ஆர்ஷேயம், தல்வகாரம், வம்சம், தைவதம், கோபதம் ஆக ஏழாகும். உபநிஷதங்கள் சந்தோக்யம், கேன் என இரண்டு. இதற்கான பிரமாண சூத்ரங்கள் அரண்யங்கள் இல்லை. இதன் உபவேதம் இசைமாலையாகிய காந்தர்வமாகும்.
 
அதர்வண வேதம்
 
அதர்வண வேத மொழிகளுக்கு மந்திரங்கள் என்பது பெயர். இவ்வேதத்துள் 5847 மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இவை 733 வர்க்கங்களாகவும் 111 அனுவாகங்களாகவும் 34 ப்ரபாடங்களாகவும் 20 காண்டங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த வேதத்திற்கு சாகைகள் பிப்ப லாதம், தனதம், இளதம், சளநகீயம், ஜாஜலம், ஜலதம், பிரமவதம், தேவதர்சனம், சாரனைவத்யம் எனும் ஒன்பதாகும். இவற்றில் பிப்லாதமும் சௌனகமும் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த வேதத்திற்குரிய பிரமாணங்கள் கல்பசூத்ரங்கள் அரண்யங்கள் ஏதும் இல்லை. உபநிஷதங்கள் முண்டகம், பிரச்சினம், மாண்டூக்யம் என்ற மூன்றாகும். வேதம் பயில்வதை விளக்கிக் கூறும் அங்கநூல்கள் ஆறாகும். சீட்சை, வியாகரணம், சந்தஸ், ஜோதிஷம், நிருத்தம் கல்பம், கல்பசூத்ரம் என்பவையே அவை. சீஷை: சிட்ஷை என்பது வேத மந்திரங்களில் உள்ள மந்திரச் சொற்களை உச்சா¢க்கும் முறைகளை விளக்குவதாகும். இதில் எழுத்து, ஸ்வரம், மாத்திராகாலம் முதலியன விளக்கப்பட்டுள்ளன. பாணிணி இதற்கு விளக்க நூல்களை செய்துள்ளார்.
 
வியாகரணம் என்பது வேதத்தின் இலக்கணத்தை விவா¢ப்பதாகும். பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் முதலியோர் வியாகரண விளக்க நூல்கள் செய்துள்ளனர்.

சந்தஸ்என்பது வேதத்தை இசைக்கும் முறையில் எழுத்துக்களின் எண்ணிக்கையை விளக்குவதாகும். வேதத்தில் காயத்ரி, உஷ்ணிக், ஸ்னுஷ்டுப், ப்ருஹதீ, பங்தீ, த்ருஷ்டுப், ஜகதீ எனும் ஏழு சந்தஸ்கள் உள்ளன. இவை வேதத்தினை எப்படி ஏற்றி இறக்கி ஓத வேண்டும் என்பதையும் வேதத்தின் ஒவ்வொரு அடியிலும் வர வேண்டிய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் வரையறுப்பதாகும். பிங்கல முனிவர் இதற்கு நூல் எழுதியுள்ளார்.

ஜோதிஷம் என்பது வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வருங்காலத்தை விளக்குவதாகும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள சாந்திகளையும் தானங்களையும் முறைப்படி உரிய காலத்தில் செய்ய வேண்டும். அதற்குக் காலத்தைப்பற்றிய அறிவு அவஸ்யமாகிறது. காலத்தை நிர்ணயிப்பதில் ஜோதிட நூல் துணை செய்கிறது. ஆதித்தன் பாஸ்கர பட்டர் இதற்கு நூல் செய்துள்ளார்.

நிருத்தம்: இது வேத மொழிகளுக்கும் அவற்றின் ஒலிகளுக்கும் விளக்கம் கூறும் அகராதி போன்றதாகும். இதன் மூலம் வேத வாக்யங்களின் உண்மைப் பொருளை அறிய முடிகிறது. இதற்குப் பாஸ்கரராயர் உரை உள்ளது.
கல்பம் என்பது வேதங்கள் கூறும் மந்திரங்களின் அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்களை வகைப்படுத்திக் கூறுவதாகும். இவை ஸ்ரௌதம், கிருஹ்யம், தர்மம் என மூன்று வகைப்படும்.

மீமாம்சை என்பது பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை என்று இரண்டு வகையாக உள்ளது. பூர்வ மீமாம்சை ஜை மினியால் செய்யப்படுவதாகும். 12 கண்டங்களுடன் 60 அத்தியாயங்களும் பல சூத்திரங்களையும் கொண்டது.
 
வேதாந்தம் என்பது வேதத்தின் முடிவு அல்லது வேத சாரத்தைக் குறிப்பதாகும். 191 விஷயங்களைப் பற்றி 558 சூத்திரங்களால் இந்நூல் ஆக்கப்பட்டது. இது நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களைக் கொண்டவை. இதனை ப்ரம்ம சூத்ரம் என்றும் அழைப்பர். இது வேத வியாசர் இயற்றியது.

நியாயம் என்பது ஒன்றைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளை நிறுவும் நூலாகும். இதனை இயற்றியவர் கௌதமர் ஆவர். 537 சூத்ரங்களைக் கொண்டது. ஒரு பொருள், செயல் நிஜமா என்பதை ப்ரமாணம், ப்ரமேயம், சம்சயம், ப்ரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், வாதம் முதலியவற்றால் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று கூறுகிறது.

வைசேஷிகம்: வையத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் பிரித்து அதன் குணங்களை ஆராய்ச்சி செய்து அறிவிக்கும் நூலாகும். கணாத முனியால் அருளப்பட்ட இந்நூல் 373 சூத்ரங்களைக் கொண்டது. த்ரிவ்யம் குணம் கர்மம், சாமான்யம், விசேஷம், சமவாயம் முதலிய ஆறு வகையாக உணர்த்துவதாகும்.
 
வேதபடனம்: வேதத்தைப் பல்வேறு வகையில் ஓதுவதே வேதபடனம் எனப்படும். அவை மூலசமிதை, பதசமிதை, கிரமம், ஜடை, கனம் என்பனவாகும். மூலசமிதை என்பது வேத மந்திரங்களைச் சந்தி சேர்த்துச் சொல்வது. பதசமிதை என்பது பதம் பதமாகப் பிரித்துச் சொல்வதாகும். கிரமம் என்பது ஒரு பதத்தை இன்னொரு பதத்திற்கு முன்னும் பின்னும் சேர்த்துச் சொல்வதாகும். ஜடசம்ஹிதை பதங்களைச் சேர்த்துப் பிரித்துச் சொல்வதாகும் (ஜடை பின்னுவது போல்). வேதம் பயிலும் மாணவர்கள் நிலையாகத் தங்கிப் பயின்ற இடங்கள் கடிகை எனப்பட்டன. காஞ்சீபுரம், சோழங்கிபுரம் முதலிய ஊர்களில் கடிகைகள் இருந்ததை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

வாழ்க வளமுடன்
க.செந்தில்குமார் .

ஆராதனைக்குரிய நமது ஆசார்ய புருஷர்கள் (முனிவர்கள்).

வேதவ்யாஸர் (கிருஷ்ணத்வைபாயணர்)

கிருஷ்ண பரமாத்மாவின் மற்றொரு அவதாரமான இவர் வஸிஷ்டரின் கொள்ளுப் பேரன் சக்தி முனிவரின் பேரன், பராசர முனிவரின் குமாரர் ஆவார். இவர் காற்றுவெளி மண்டலத்தில் ஒலிவடிவாய் இருந்த அனைத்து வேதங்களையும் புராணங்களையும் தன் தவ வலிமையால் கண்டு அவைகளுக்கு புத்துயிர் ஊட்டி அவைகளை (ரிக் 21, யஜுர் 101, சாமம், 1000, அதர்வணம் 9) என்று பிரித்தும் விரித்தும் (விரிவாயும்) வழங்கினார். அந்த க்ருஷ்ணத்வைபாயணரை நாம் தினமும் நமஸ்கரிக்க வேண்டும்.

ஆஸ்வலாயணர்

வ்யாஸர் வழங்கிய 21 கிளைகளை உடைய ரிக் வேதத்தில் தற்போது தென்னிந்தியாவில் ஒன்றும் வட இந்தியாவில் ஒன்றும் 2 கிளைகள் மட்டுமே உள்ளது. தென்னிந்தியாவில் சாகல சாகையும் வட இந்தியாவில் பாஷ்கள சாகையும் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள சாகல சாகை (ரிக்) க்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ அபர ப்ரயோகங்களை) வழங்கி ரிக் வேதிகளுக்கு அருளிய ஆசார்யர் ஆஸ்வலாயனரை நாம் தினசரி நமஸ்கரிக்க வேண்டும்.

போதாயனர்

வ்யாஸர் வழங்கிய யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர் வேத சாகைகள் (89 சுக்ல யஜுர் 15 ஆக 101) அந்த 86 சாகைகளில் தற்போது நம்மிடம் உள்ளது தைத்தரீய சாகை என்ற ஒன்று மட்டுமே. அந்த க்ருஷ்ண யஜுர் வேத தைத்தரீய சாகைக்கு மட்டும் க்ருஹ்ய சூத்யம் (பூர்வ அபர) செய்த ஆசார்யர்கள் 6 பேர் அதில் முதன்மையானர்வர் போதாயனர் ஆவார். அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கணக்கு முறையை (மேதமேடிக் வேதிக்மேதமேடிக்) வழங்கியவரும் இவரேயாவார். ஆகவே அந்த ஆசார்யருக்கு நமஸ்காரம்.

ஆபஸ்தம்பர்

போதயனர் வழங்கிய பூர்வ அபர கர்மாக்களை நன்கு ஆய்வு செய்து சற்று சுருக்கமாகவும் எளிமையாகவும் மற்ற வேதத்தைச் சார்ந்தவர்களும் கூட எளிதில் புரிந்து கொள்ளும்படி தன் ஞானத்தையும் போதாயனரின் கருத்துக்களையும் இணைத்து ஒரு க்ருஹ்ய சூத்ரத்தை (ஆபஸ்தம்பம்) வழங்கினார். இன்று தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஏறத்தாழ 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கடைபிடிக்கும் சூத்ரம் ஆபஸ்தம்பர் செய்ததாகும். அந்த ஆசார்யர் ஆபஸ்தம்பருக்கு நமஸ்காரம்.

காத்யாயனர்

வ்யாஸர் வழங்கிய யஜுர் வேதம் 101 கிளைகளில் 15 கிளைகள் சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்தது. குருகுலத்தில் பயிற்சி பெற்ற யாக்ஞவல்க்யர் சூழ்நிலை காரணமாக கற்ற வேதத்தை குருவிற்கே அற்பணித்துவிட்டு சூர்யனிடம் சுக்ல யஜுர்வேதத்தின் 15 கிளைகளையும் கற்று நமக்கு வழங்கினார். அதில் 1 கான்வ சாகை 2 மாத்யந்தின சாகை. அந்த 15 கிளைகளுக்கும் ஒரே க்ருஹ்ய சூத்ரம். அதைச் செய்தவர் காத்யாயனர். ஆகவே அந்த ஆசார்யர் காத்யாயனர் அவர்களுக்கு நமஸ்காரம்.

த்ராஹ்யாயனர் (காதிரர்)

வேதவ்யாஸர் வழங்கிய சாமவேதம் 1000 கிளைகளை உடையது. அதில் தற்போது 3 மட்டுமே உள்ளது. 1 ராணாயணீய சாகை, 2. கௌதும சாகை, 3. ஜைமினி சாகை. அதில் தென்னிந்தியாவில் அனேகமாக ரானாயணீய சாகை மட்டுமே உள்ளது. அந்த ராணாயணீய சாகைக்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ அபர ப்ரயோகம்) செய்து அருளியவர் த்ராஹ்யாயனர் ஆவார். அவருக்கு மற்றொரு பெயர் காதிரர் (காதிர க்ருஹ்ய சூத்ரம்). ஆகவே அந்த ஆசார்யர் த்ராஹ்யாயணர் அவர்களுக்கு நமஸ்காரம்.

கௌசிகர்

வ்யாஸர் வழங்கிய அதர்வன வேதம் 9 கிளைகளை உடையது. அதில் 2 கிளைகள் மட்டுமே தற்போது உள்ளது. (ஆயுர்வேதம், மந்திர சாஸ்திரங்கள் மிகவும் தெளிவாக அமைந்துள்ளது.) ஒன்று கௌனக சாகை, மற்றொன்று பிப்பலாத (பைபிலாத) சாகை. இதில் சார்ந்தவர்கள். அவர்களில் சௌனக சாகையைச் சேர்ந்தவர்களே அதிகம். அந்த சௌனக சாகைக்கு க்ருஹ்ய சூத்ரம் (பூர்வ, அபர ப்ரயோகம்) செய்து அருளிய ஆசார்யர் கௌசிகர் ஆவார். அந்த கௌசிகருக்கு நமஸ்காரம்.

ஆண்டப்பிள்ளையார்

எல்லா வேதத்தைச் சார்ந்தவர்களும் அக்னி ஹோத்ரம், பசுபந்தம், ஸோமயாகம், கருட சயனம், வாஜ பேயம், அப்தோர் யாமம், உக்த்யம், ஷோடசீ போன்ற யாகங்களை அனுஷ்டிக்க அந்தந்த ஆசார்யர்கள் ப்ரயோகங்களை வகுத்திருந்த போதிலும் அதிகமாக தற்போது நடைமுறையில் அனுஷ்டிக்கப்படுவது ஆண்டப்பிள்ளையார் வகுத்த வழிமுறைகளையே சார்ந்துள்ளது. ஆகவே அந்த சிரௌத ஆசார்யர் ஆண்டப்பிள்ளையார் அவர்களுக்கு நம்ஸ்காரம்.










வாழ்க வளமுடன்

க .செந்தில் குமார்

தண்ணீரின் மேல் நடக்கலாம் ..

வெறும் கையில் மோதிரம் வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் வருவது எல்லாம் மந்திரங்களால் முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்கு பதிலையும் தெளிவையும் தரவேண்டியது அவசியம்

மந்திர வித்தைகள் என்பது வேறு, கண்கட்டி வித்தைகள் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொண்டிருக்கிறோம். இந்த குழப்பல் வேலையை பல புகழ் பெற்ற சாமியார்கள் செய்து பல கோடி ரூபாய்க்கு அதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள் இதற்கு எல்லாம் காரணம் மந்திர சாஸ்திரங்கள் பற்றிய அறிவு மக்களிடம் இல்லாததே ஆகும்.







ஒரு முறை திபெத் நாட்டிற்கு பண்டிதர் நேரு சென்ற போது அந்த நாட்டை சேர்ந்த ஒரு புத்த மத லாமா தனது மந்திர சக்தியால் நேருவின் தலைக்கு மேல் ஒரு மேக கூட்டத்தை வரவழைத்து பன்னீர் தெளிப்பது போல மழையை பெய்வித்தார். இத்தகைய மந்திர சக்திகளை பெற்ற பல லாமாக்கள் இன்று கூட திபெத் நாட்டில் உள்ளனர். அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆதிக்க வெறி பிடித்த சீனாவிடமிருந்து தங்களது நாட்டை மீட்டு கொள்ள முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம் மந்திர சாஸ்திரம் அறிந்தவர்கள் கர்ம சாஸ்திரத்தையும் அறிந்தவர்களாகவே இருப்பார்கள். இந்த மாதிரி இத்தனை காலம் நடக்க வேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை மீறும் துணிச்சல் அவர்களுக்கு இருக்காது.


நடுத்தெருவில் மோடி மஸ்தான் வித்தை காட்டுவதை பலர் பார்த்திருப்பீர்கள். அந்த வித்தையில் சாதாரண கோழி முட்டை அந்தரத்தில் பறப்பதையும் பார்த்து வியந்திருப்பீர்கள். குருவி பறக்கலாம். முட்டை பறக்க முடியுமா? முடியும் ஒரு நல்ல கோழி முட்டையை மேல் புறத்தில் சிறிதாக ஓட்டை போட்டு உள்ளே இருக்கும் கருவை வேளியே எடுத்துவிட வேண்டும்.




வெறும் முட்டை ஓட்டை மட்டும் மார்கழி மாத பனியில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக பத்து, இருபது நாள் வைத்து எடுத்து உள்ளே இருக்கும் பனித்துளி வெளியில் போகாத வண்ணம் மெழுகால் அடைத்து விட வேண்டும். பிறகு வெய்யிலில் வைத்தால் உள்ளே இருக்கின்ற பனி உருகி ஆவியாகி மேல் எழும்பும் கூடவே முட்டையும் தூக்கி கொண்டு பறக்கும். சுற்றி இருக்கும் கூட்டத்தார் கூத்தாடியின் சக்தியை பார்த்து வியப்பார்கள். சிலர் பயப்படவும் செய்வார்கள்

இப்படி மந்திரத்தோடு சம்பந்தப்படாத எத்தனையோ வித்ததைகள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.










உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும். காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும்.

மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊர வைத்து ஒரு பாட்டலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்,






நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன. இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைபாடுகளை செய்கிறார்கள்.

இது தவிர குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள்.






நமது சித்தர்களும், ஞானிகளும் செய்கின்ற சித்து விளையாடல்கள் ஆன்மிக நோக்கம் கொண்டதே தவிர இலாப நோக்கம் கொண்டது அல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.

மேலும் யோக பாதையில் செல்லுகின்ற துவக்க பயிற்சியாளர்களுக்கு இத்தகைய சித்துக்கள் மனதில் தெம்பையும், உற்சாகத்தையும் கொடுத்து அவர்களது முயற்சிக்கு நல்ல ஊக்க மருந்தாக அமையும்.

மேலும் ஒரு யோக பயிற்சியாளனுக்கு இறுதி நோக்கம் என்பது கடவுளை அடைவதை தவிர சித்துக்களை அடைவதில்லை. ஒரு யோகி சித்துக்களை காட்ட துவங்கிவிட்டால் அவன் தன் நிலையிலிருந்து கீழே நிலைக்கு வருகிறான் என்று அர்த்தம். சாதாரண மனிதர்களை திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துவது ஒரு வித வியாபாரமே ஆகும்.




விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...!


நெடு நாட்களாக முடிவே இல்லாமல் மனிதனுக்கு தேவையானது விஞ்ஞானமா மெஞ்ஞானமா என்ற விவாதம் நடந்து வருகிறது

ஆன்மிக வாதிகள் தங்களது வாதமே சரி என சண்டை போடுகிறார்கள்

அறிவியல் வாதிகளோ தாங்கள் தான் உலகத்தின் உண்மையான மேய்ப்பர்கள் என்று மார் தட்டுகிறார்கள்

மனிதனுக்கு உண்மை தேவை எது அறிவியலா? ஆன்மிகமா?






கத்தரி வெய்யில் சுட்டெரிக்கிறது. உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது.

வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது.

ஆன்ம நேயம், ஜீவ காருண்யம் என்று எல்லாம் பேசுகின்ற ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை.

மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது






தவிர கடவுளா வந்து கனப்பு சட்டியில் நெருப்பு வைக்கிறார் என்று நமது மனம் பல நேரங்களில் நினைத்து தடுமாறுகிறது.

காலராவை ஒழித்தது விஞ்ஞானம். கால் கடுக்க நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம்.

கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம்.

இத்தனையும் தந்த விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் போற்றுவதை விட்டுவிட்டு






ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்?

அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும்

வெப்பத்தில் வியர்க்கிறது. வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது.

காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும். ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.

குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது. நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது.




கம்பளி குளிரை தடுக்கலாம். நோயை தடுக்காது.

எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம் மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும்.

ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது. அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிக்காட்டும்.

நிரந்தரமான சந்தோஷம் தான் ஆன்மிகத்தின் இறுதி நோக்கம்.

நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரவில்லை.






மாறாக மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

எல்லா துறைகளிலும் விஞ்ஞான மயமாகி கொண்டிருப்பது தான். மனிதன் மனதிலுள்ள கருணை நதி வற்றி போனதற்கு காரணமாகும்.

அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல.

எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே கருத்தாகும்.






ஒரு வகையில் சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான்.

மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம். அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும்.

சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி. இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறான் ஆன்மிகவாதி.

அறிவியல் வாதியோ பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறான்.

சொல்லுகின்ற முறையில் தான் வார்த்தையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

அதாவது மெஞ்ஞானி உண்மைகளை தத்துவங்களாக பேசுகிறான்.






விஞ்ஞானி அதே உண்மைகளையே பௌதிகமாக பேசுகிறான்.

மனிதனுக்கு அவனுடைய சுகத்திற்கு அறிவும் வேண்டும். உணர்வும் வேண்டும்.

விஞ்ஞானம் இல்லாத ஆன்மிகம் குருடானது.

ஆன்மிகம் இல்லாத விஞ்ஞானம் இதயம் இல்லாதது என்று ஆன்றோரின் வார்த்தையை உணர்ந்தால் சுகம் ஆன்மிகமா? விஞ்ஞானமா? என்பது புரியும்.