அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் தவிர வேறு சில நூல்களும் இருக்கின்றன. கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், இருபத்தேழு திருவகுப்பு பாடல்கள் ஆகியவை.
திருவகுப்பு பாடல்களுக்கு பிரயோக முறையன்றுண்டு. அதாவது இன்னின்ன காரணங்களுக்காக, வேண்டுகோளுக்காக பாராயணம் செய்வது என்ற மரபு உண்டு.
நாளை தைப்பூசத்திருநாள். தைப்பூசத்தன்று முருகன் சக்தியிடம் சக்திவேல் பெற்றதாக கௌமார சமயத்தினர் அதனைச் சிறப்பித்துக் கொண்டாடுவார்கள்.
அதை முன்னிட்டு வேலைச் சிறப்பித்து பாடப்பட்ட திருவகுப்புகளில் ஒன்றான 'வேல் வகுப்பு' என்னும் பாடல் இங்கு அனுப்பப்படுகிறது. ஆபத்துக்கள் யாவும் அகன்றுபோக இதனை படிப்பார்கள்.
திருவகுப்பு பாடல்களுக்கு பிரயோக முறையன்றுண்டு. அதாவது இன்னின்ன காரணங்களுக்காக, வேண்டுகோளுக்காக பாராயணம் செய்வது என்ற மரபு உண்டு.
நாளை தைப்பூசத்திருநாள். தைப்பூசத்தன்று முருகன் சக்தியிடம் சக்திவேல் பெற்றதாக கௌமார சமயத்தினர் அதனைச் சிறப்பித்துக் கொண்டாடுவார்கள்.
அதை முன்னிட்டு வேலைச் சிறப்பித்து பாடப்பட்ட திருவகுப்புகளில் ஒன்றான 'வேல் வகுப்பு' என்னும் பாடல் இங்கு அனுப்பப்படுகிறது. ஆபத்துக்கள் யாவும் அகன்றுபோக இதனை படிப்பார்கள்.
வேல்வகுப்பு
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை இஇருக்குமொரு
கவிப்புலவன் இஇசைக்குருகி வரைக்குகையை
இஇடித்துவழி காணும்
பசித்(து)அலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கஅருள் நேரும்
சுரர்க்குமுனி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இஇடுக்கண்வினை சாடும்
சுடர்ப்பரிதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும்
துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்கவிடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்கொர்துணை ஆகும்
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கியெழு
மறத்தை நிலை காணும்!
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇஇறை
கழற்குநிகர் ஆகும்
தலத்திலுள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிக்கவளை வாகும்
தனித்துவழி நடக்குமென(து) இஇடத்துமொரு
வலத்தும்இஇரு புறத்தும்அரு(கு) அடுத்(து)இஇரவு
பகல்துணைய தாகும்
சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில்
விருப்பமொடு சூடும்;
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர ஓடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே.
அன்புடன்செந்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக